திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு!
நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது!
புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் புது தில்லியில் இன்று தொடங்கியது.
புது தில்லியில் உள்ள சுஷ்மா சுவாராஜ் பவனில் 56வது ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டமானது இன்று தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள் பங்கேற்றுள்ள இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டி விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைப்பது மற்றும் புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது 40% வரி விதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.