செய்திகள் :

ஹிமாசலை சூறையாடும் மழை! நிலச்சரிவுக்கு 6 பேர் பலி; 1,150 சாலைகள் துண்டிப்பு!

post image

ஹிமாசல் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் செவ்வாய்க்கிழமை இரவு பலியாகினர்.

மேலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பாலங்களும் சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர், ஹிமாசல் பிரதேசம், தில்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகின்றது.

ஆறுகளில் நீரோட்டம் கடுமையாக அதிகரித்துள்ளதால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்குள் நீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில், மண்டி மாவட்டம் சுந்தர்நகரில் அமைந்துள்ள ஜங்பாக் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு வீடுகள் நிலத்துக்கு அடியில் புதைந்தது.

இந்த சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட மொத்தம் 6 பேர் பலியாகினர். இதில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரும் அடங்குவார். மேலும், காணாமல் போன ரஹில் என்ற இளைஞரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் காவல்துறையினரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல், குல்லு மாவட்டத்தில் உள்ள அகாரா பஜார் பகுதியிலும் நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மண்ணுக்குள் இரண்டு பேர் புதைந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சாலைகள் மூடல்

ஹிமாசலில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக 7 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 1,150 சாலைகள் இதுவரை மூடப்பட்டுள்ளது.

மண்டி, சிம்லா, குல்லு ஆகிய மாவட்டங்களில் சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மண்டி, காங்க்ரா, சிர்மூர் மற்றும் கின்னௌர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Six people, including four from the same family, were killed on Tuesday night after being swept away by a landslide triggered by heavy rains in the Himachal Pradesh region.

இதையும் படிக்க : வட மாநிலங்களைப் புரட்டிப்போடும் வெள்ளம்: 3 மாநிலத்திற்குத் தொடரும் சிவப்பு எச்சரிக்கை!

ஜார்க்கண்டில் தீவிரமடையும் கனமழை! 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின், மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஏரா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் அஞ்சலி!

தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அஞ்சலி செலுத்தினார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், 3 நாள் அரசு முறைப் பயணமாக, நேற்று (செப்.2) இந்தியா வந்தடைந்தார... மேலும் பார்க்க

வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி

வெளிநாட்டுப் பயணங்களில் சிரித்துக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார் என்று பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.பிகாரில் மக்களவை எதிா்க்க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் எகிறப்போகும் ஏசி விற்பனை! ரூ.2,500 வரை குறையும் என எதிர்பார்ப்பு!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கி இரு நாள்கள் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு ஏசி விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டில் உள்ள நான்கு வக... மேலும் பார்க்க

தொடரும் வரதட்சணை கொடுமை: பெங்களூரில் ஒரே வாரத்தில் 2வது தற்கொலை!

கர்நாடக மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் 28 வயது பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகலகுண்டேவில் வசித்துவந்தவர் பூஜாஸ்ரீ. இவர் வங்கி ஒன்றின் காசாளராக பணியாற்... மேலும் பார்க்க

எரிவதில் எண்ணெய் ஊற்றும் ரஷியா! இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் மேலும் தள்ளுபடி

ஏற்கனவே, ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையை இந்தியாவுக்கு மேலும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவ... மேலும் பார்க்க