செய்திகள் :

வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி

post image

வெளிநாட்டுப் பயணங்களில் சிரித்துக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார் என்று பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.

பிகாரில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நடத்திய வாக்குரிமைப் பயணத்தின் போது, அவர் பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் மைக்கை எடுத்து அடையாள தெரியாத நபர் ஒருவர், பிரதமா் மோடி மற்றும் அவரது தாயாா் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தது சர்ச்சையானது.

இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, பிகாரில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான கூட்டுறவு சங்கத்தை காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்துப் பேசினார்.

அப்போது, ”பாரத தாயை அவமதிப்பவா்களுக்கு, எனது தாயாருக்கு எதிராக அவதூறு வாா்த்தைகளைப் பயன்படுத்துவது ஒரு பொருட்டல்ல. என் தாயாரை அவமதித்தற்காக, நான் வேண்டுமானால் மன்னிக்கலாம், ஆனால், பிகாா் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் கருத்து குறித்து செய்தியாளர்களுடன் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:

”யாருடைய தாயையும் யாரும் அவமதிக்கக் கூடாது. நாங்கள் இதை ஆதரிக்கவில்லை, அது எங்கள் கலாச்சாரத்திலும் இல்லை. ஆனால் பிரதமர் மோடி சோனியா காந்தியைப் பற்றிப் பேசியுள்ளார், நிதிஷ் குமாரின் டிஎன்ஏ குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் என் தாயையும் சகோதரிகளையும் அவமதித்துள்ளனர். பாஜக செய்தித் தொடர்பாளர்கள் பெண்களைத் தொடர்ந்து அவமதிக்கிறார்கள்.

பிகார் மக்களுக்கு எல்லாம் தெரியும். பிரதமர் இவ்வளவு நாள்கள் வெளிநாட்டில் இருந்த போது சிரித்துக் கொண்டிருந்தார், இந்தியா வந்தவுடன் அழத் தொடங்கிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

Modi, who was smiling abroad, started crying upon arriving in India.

இதையும் படிக்க : ’க்வாட்’டிலிருந்து வெளியேறி சீன உறவை மேம்படுத்த வேண்டும்! இந்தியாவுக்கு அமெரிக்க பொருளாதார வல்லுநர் ஜெஃப்ரி சாக்ஸ் யோசனை!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுக்மா மாவட்டத்தின், ராவகுடா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை மற... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். வட மாநிலங்களான ஜம்மு... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம்! 5,500 மக்கள், 300 துணை ராணுவ வீரர்கள் மீட்பு!

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 300 துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் 5,500 மக்கள், ராணுவப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.பஞ்சாபில், பெய்த கனமழையால் காகர் நதியின் நீர... மேலும் பார்க்க

சாலையில் நடனம்: அராஜகத்தை ஊக்குவிக்கிறார் தேஜஸ்வி - பாஜக

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விதிமுறைகளுக்கு மாறாக சாலையில் நடனமாடி அராஜகத்தை ஊக்குவிப்பதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. மேலும், கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டிய... மேலும் பார்க்க

ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலி கடித்து படுகாயமடைந்த, மற்றொரு பச்சிளம் குழந்தையும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தூர் மாவட்டத்தில் உள்ள, மஹாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத... மேலும் பார்க்க

ரீல்ஸ் விடியோவுக்கு நடனமாடிய தேஜஸ்வி யாதவ்!

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், இளைஞர்களுடன் இரவுச் சாலையில் நடனமாடிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில், பாடலுக்கு ஏற்பவும் இளைஞர்களின் நடன அசைவுகளுக்கு ஏற்பவும் த... மேலும் பார்க்க