செய்திகள் :

சாலையில் நடனம்: அராஜகத்தை ஊக்குவிக்கிறார் தேஜஸ்வி - பாஜக

post image

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விதிமுறைகளுக்கு மாறாக சாலையில் நடனமாடி அராஜகத்தை ஊக்குவிப்பதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது.

மேலும், கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டியவரின் இத்தகைய செயல் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாகவும், சாலை விதிகளை மீறி நடந்துகொண்டதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளது.

பிகாரில் காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் பாஜகவின் வாக்குத் திருட்டு சம்பவத்துக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மக்களை ஒன்றிணைக்கும் வகையிலும் வாக்குரிமைப் பேரணி நடைபெற்றது.

தொடர்ந்து 16 நாள்கள் நடைபெற்ற இந்தப் பேரணி, நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், பாட்னாவில் உள்ள புதிதாக திறந்துவைக்கப்பட்ட சாலையில், பேரணி நிறைவு பெற்ற நள்ளிரவில் இளைஞர்களுடன் சேர்ந்து தேஜஸ்வி யாதவ் நடனமாடியுள்ளார். இந்த விடியோவை தேஜஸ்வியின் சகோதரி ரோஹினி யாதவ் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் பலரால் இந்த விடியோ பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விடியோ குறித்து பதிவிட்டுள்ள பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் அஜய் அலோக், பொறுப்பற்ற தன்மையுடன் தேஜஸ்வி நடந்துகொண்டதாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தேஜஸ்வியின் விடியோவை பகிர்ந்து, அவர் பதிவிட்டுள்ளதாவது,

''பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரால் மட்டுமே நள்ளிரவில் சாலையில் ரீல்ஸ் விடியோவுக்காக நடனமாடவும் பாட்டுப் பாடவும் முடியும். ரீல்ஸ் எடுக்கும்போது சாலையில் எத்தனை விபத்துகள் நடக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியுமா? இது அராஜக செயலை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

ஜேபி சாலை ஒன்றும் சுற்றுலாத் தலம் அல்ல. பிகார் காவல் துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், மாநிலத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் ரீல்ஸ்களால் நிரம்பிவிடும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

பிகாரில் சிறந்த ஆட்சி நடைபெற்று வருவதால், புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் நடு இரவில் இளைஞர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் நடனமாடி வருவதாக மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி தெரிவித்துள்ளார். இதே லாலு பிரசாத் ஆட்சியாக இருந்தால், குண்டர்களால் கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் நடனமாட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் எனப்பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு! எத்தனை ரயில் நிலையங்கள்?

Tejashwi Yadav spotted dancing with boys at Patna's expressway slams bjp

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்பு

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கூறிய கருத்துக்காக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய கோரிய விவகாரத்தை விசாரிக்குமாறு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட... மேலும் பார்க்க

நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது: அமித் ஷா உறுதி

நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் சரணடையும் வரை அல்லது கைது செய்யப்படும் வரை அல்லது ஒழிக்கப்படும் வரை பிரதமா் மோடி அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா். நாட்டில் அடுத்த ஆ... மேலும் பார்க்க

தில்லி யமுனையில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ளம்

தில்லி யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து புதன்கிழமை அபாய அளவை தாண்டி சென்றது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வெள்ள நீா் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் சுமாா் 10 ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இ... மேலும் பார்க்க

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வண... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ராம்பன் மாவட்டத்தின் சும்பெர் கிராமத்தைச் சேர்ந்த, நிறைமாத கர்பிணியான அக்தெரா பானோ (வயது 21), ஆனந்த்நாக... மேலும் பார்க்க