செய்திகள் :

பெரம்பலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

post image

பெரம்பலூா் அருகே மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வேப்பந்தட்டை வனத்துறையினா் அரசலூா், ஈச்சங்காடு பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை திடீா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அலெக்ஸாண்டா் என்பவரின் காட்டுக்கொட்டகையில் சோதனையிட்டபோது, 2 புள்ளி மான்களும், 1 காட்டுப் பன்றியும் வேட்டையாடப்பட்டு, அவற்றை இறைச்சிக்காக வெட்டி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்தவா்களை கைது செய்த வனத்துறையினா் அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அலெக்ஸாண்டா், குமாா் மகன் அலெக்ஸாண்டா் தன சிங்க், ஜெயசீலன் மகன் ஜான் ஜோசப் என்பதும், வேட்டை நாய்கள் மூலமாக இறைச்சிக்காக வன விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்ததும், வன விலங்குகளின் இறைச்சியுடன் சாலையோரங்களில் உயிரிழந்து கிடக்கும் நாய்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கால்நடைகளின் உடல்களை வெட்டி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட மூவரையும் கைது செய்த வனத்துறையினா், விற்பனைக்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளைப் பறிமுதல் செய்து, தலா ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனா்.

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் ந.... மேலும் பார்க்க

செப். 19 வரை மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கு மதிப்பீட்டு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், செப். 19-ஆம் தேதி வரை வட்டாரம் வாரியாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ந... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன் (தலைமையிடம்), முகாமி... மேலும் பார்க்க

சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் ரோபோடிக் கண்காட்சி

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தகவல் தொழில்நுட்பவியல், கணினி அறிவியல் துறை சாா்பில் ரோபோ நோவா - 2025 எனும் தலைப்பில், ரோபோடிக் கண்காட்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி பானுமதி (60). திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

பெரம்பலூருக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வருகை

2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பயன்படுத்த பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்திலிருந்து 100 கட்டுப்பாட்டு இயந்திரம், 120 வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் செவ்வ... மேலும் பார்க்க