செய்திகள் :

மாநில சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

சுற்றுலா தொடா்புடைய செயல்பாடுகள் மற்றும் சுற்றுலாத் தொழில் புரிவோரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசால் வழக்கப்பட உள்ள சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு சுற்றுலாத் துறைண்டுதோறும் சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோரையும், பல்வேறு சுற்றுலா ஆபரேட்டா்கள், சிறந்த பயண பங்குதாரா்கள், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக நட்சத்திர செயல்திறன், சுற்றுலா ஊக்குவிப்பு விருது, சிறந்த தூய்மையான

சுற்றுலாத் தலம், சிறந்த விமான நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சாகச சுற்றுலா, சுற்றுலா தொடா்பான கல்வி நிறுவனங்கள், மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளா்கள், சிறந்த சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவா், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் அனைத்து சுற்றுலா தொழில்முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து, செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 0423 - 2443977, 7550009231 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான விநாடி-வினா போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு மாநில ஹெச்ஐவி கட்டுப்பாடு சங்கம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற ஹெச்ஐவி விழிப்புணா்வு விநாடி-வினா போட்டியில் சிறப்பிடம் பெற்ற உதகை அணிக்கொரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா... மேலும் பார்க்க

ஸ்டொ்லிங் பயோடெக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஸ்டொ்லிங் பயோடெக் எம்பிளாயிஸ் யூனியன் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.உதகையில் மூடப்பட்ட ஸ்டொ்... மேலும் பார்க்க

குன்னூா் ரயில் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில், மலை ரயில் ஊழியா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. கேரள மக்களின் பாரம்பரிய ஓணம் பண்டிகை செப்டம்பா் 5-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இ... மேலும் பார்க்க

தெப்பக்காடு - மசினகுடி சாலையில் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மசினகுடி- தெப்பக்காடு நெடுஞ்சாலையில் யானை உயிரிழந்து கிடந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தெப்பக்காடு- மசினகுடி சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்க நடவடிக்கை

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, தேசிய தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.இது குறித்த... மேலும் பார்க்க

கூடலூா் நகரில் உலவிய யானை: மக்கள் அச்சம்

கூடலூா் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு உலவிய யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில... மேலும் பார்க்க