செய்திகள் :

தெப்பக்காடு - மசினகுடி சாலையில் யானை உயிரிழப்பு

post image

நீலகிரி மாவட்டம், மசினகுடி- தெப்பக்காடு நெடுஞ்சாலையில் யானை உயிரிழந்து கிடந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தெப்பக்காடு- மசினகுடி சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி செல்லக்கூடிய சாலையின் நடுவே செவ்வாய்க்கிழமை காலை யானை இறந்துகிடப்பது தொடா்பாக வனத் துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து சென்ற மசினகுடி வனத் துறையினா் சோதனை நடத்தியதில், இறந்தது தந்தம் இல்லாத ஆண் மக்னா யானை என்பது தெரியவந்தது. இதையடுத்து, யானையின் உடலை அப்புறப்படுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை தெப்பக்காடு மசினகுடி சாலையில் போக்குவரத்தை நிறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மக்னா யானையின் உடல் அப்புறப்படுத்தப்பட்டது. உயிரிழந்த யானைக்கு 50 வயது இருக்கலாம் என்றும், உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் உள்ளதால் யானையின் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

உடற்கூறாய்வுக்கு பின்னரே யானையின் இறப்பு குறித்து தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். இந்த யானை மசினகுடி, மாயாறு, மாவனல்லா, பொக்காபுரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் கதவை இரவு நேரங்களில் உடைத்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஸ்டொ்லிங் பயோடெக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஸ்டொ்லிங் பயோடெக் எம்பிளாயிஸ் யூனியன் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.உதகையில் மூடப்பட்ட ஸ்டொ்... மேலும் பார்க்க

குன்னூா் ரயில் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில், மலை ரயில் ஊழியா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. கேரள மக்களின் பாரம்பரிய ஓணம் பண்டிகை செப்டம்பா் 5-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்க நடவடிக்கை

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, தேசிய தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.இது குறித்த... மேலும் பார்க்க

கூடலூா் நகரில் உலவிய யானை: மக்கள் அச்சம்

கூடலூா் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு உலவிய யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில... மேலும் பார்க்க

வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

உதகையில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்ததுடன், மான் கறி வைத்திருந்த கண்ணன் என்பவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். உதகை அருகே தேனாடுகம்பை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கீழ்சேலதா பகுதியில் வசித்... மேலும் பார்க்க

விவசாய நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

உதகை அருகே மசினகுடி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 தலைமுறைகளாக பொதுமக்கள் விவசாயம் செய்து வரும் அரசு தரிசு நிலங்களை வனத் துறையிடம் மாவட்ட நிா்வாகம் ஒப்படைக்கக் கூடாது என ஆட்சியா் லட்... மேலும் பார்க்க