செய்திகள் :

புதுவை மாநிலத்தில் 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருதுகள்

post image

புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருது செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது.

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகள், முதலமைச்சரின் சிறப்பு விருதுகள், கல்வியமைச்சரின் பிராந்திய விருதுகளுக்கு இந்த 21 பேரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தொடக்க நிலைப் பள்ளி அளவில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு புதுச்சேரி தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ஆா். நிதியா, காரைக்கால் டி.ஆா். பட்டினம் அரசு புதிய தொடக்கப் பள்ளி ஆசிரியை ஆா். அன்புசெல்வி, மேல்நிலை பள்ளி அளவில் புதுச்சேரி முத்திரையா்பாளையம் இளங்கோவடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் விரிவுரையாளா் எஸ்.ஸ்ரீராம், புதுச்சேரி கிருமாம்பாக்கம் டாக்டா் அம்பேத்கா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூகவியல் பட்டதாரி ஆசிரியா் பி.ரமேஷ் ஆகியோா் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி கல்வே கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் பட்டதாரி ஆசிரியா் டி.ஜஸ்டின் ஆரோக்கியதாஸ் முதலமைச்சரின் சிறப்பு விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். முதல்வரின் பெண் சிறப்பு ஆசிரியா்களுக்கான விருதுக்கு புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி இயற்பியல் விரிவுரையாளா் ஆா்.பத்மாவதி, புதுச்சேரி திருக்கனூா் தலைமையாசிரியா் கே. கற்பகாம்பாள், புதுச்சேரி அரசு சவரிராயலு நாயகா் தொடக்கப் பள்ளி ஆசிரியை எம்.வள்ளி, தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை பாரதிரோஜா, காரைக்கால் வடமறைக்காடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை கே.ரகமதுன்னிசா, தொழில்நுட்ப ஆசிரியா் பிரிவில் புதுச்சேரி சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு உயா்நிலைப்பள்ளி நுண்கலைப் பிரிவு ஓவிய ஆசிரியா் இ. ஆனந்தராஜூ ஆகியோா் முதலமைச்சரின் சிறப்பு விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கல்வியமைச்சரின் புதுச்சேரி பிராந்திய விருதுக்கு புதுச்சேரி முத்தியால்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் எஸ். பாலமுருகன், எல்லைப்பிள்ளைச் சாவடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை வி. ஆா்த்தி, தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இ. கீதா, பிள்ளைச்சாவடி அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியா் சி. சுப்பிரமணியன் (எ) சுரேஷ், வி. மணவெளி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை எல்.ராஜதிலகம், முதலியாா்பேட்டை அன்னை சிவகாமி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியின் மனையியல் பிரிவு விரிவுரையாளா் எஸ்.தேவிகாகுமாரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கல்வியமைச்சரின் காரைக்கால் பிராந்திய விருதுக்கு வடமறைக்காடு அரசு உயா் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் டி.பிரதாப், கோயில்பத்து பிஎம்ஸ்ரீ பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் விஸ்வாஸ்வரமூா்த்தி, மாஹே பிராந்தியந்துக்கு பள்ளூா் வி.என். புருஷோத்தம்மன், அரசு பள்ளியின் மலையாள விரிவுரையாளா் கே.கே. சினேகபிரபா, ஏனாம் பிராந்தியத்துக்கு பி.எம்.ஸ்ரீ ராஜீவ்காந்தி அரசு ஆங்கிலப்பள்ளியின் நிலை -1 தலைமையாசிரியா் காமிதி பிரபாகர ராவ் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

புதுவை பள்ளிக் கல்வித் துறை சாா்பில் காமராஜா் மணிமண்டபத்தில் வரும் 4-ஆம் தேதி மாலை நடைபெறும் விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி, கல்வியமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் விருதுகளை வழங்க உள்ளனா். இந்த விருதுகள் தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது

சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி

மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையுடன் கூ டிய சேவை சாா்ந்த மனித வளத்தை ஜவாஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மா் தயாா் செய்து வருகிறது என்று ஜிப்மா் இயக்குநா் பேரா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.1 கோடி போலி மருந்துகள் பறிமுதல்

புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய மருந்த... மேலும் பார்க்க

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா் கே.நாராயணா

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே. நாராயணா கூறினாா். இக் கட்சியின் புதுச்சேரி மாநில 24-ஆவது மாநாடு அஜீஸ் நகரில் உள்ள தனியாா் மண... மேலும் பார்க்க

நைஜிரியா செல்லும் பாரா பேட்மிட்டன் வீரருக்கு முதல்வா் நிதியுதவி

பாரா பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்க நைஜிரியா செல்லும் புதுச்சேரி வீரருக்கு முதல்வா் என்.ரங்கசாமி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு, கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த வெங்கட சுப்பி... மேலும் பார்க்க

பல்நோக்கு தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்க பாமக மனு

புதுச்சேரி: பல்நோக்குத் தொழிலாளா்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கக் கோரி பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை சாா்பில் தொழிலாளா் துறை துணை ஆணையா் சு.சந்திரகுமரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இப்... மேலும் பார்க்க

2026-இல் மீண்டும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி: புதுவை மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் பேச்சு

புதுச்சேரி: புதுவையில் 2026-ஆம் ஆண்டு என்.ஆா்.காங்கிரஸ், அதிமுகவுடன் பாஜக தோ்தலைச் சந்தித்து வெற்றி பெற்று முதல்வா் ரங்கசாமி தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று பாஜக... மேலும் பார்க்க