செய்திகள் :

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை! தொழிலாளிக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

post image

திருவள்ளூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய வழக்கில் குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் பாதித்தவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் திருவள்ளூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த கூடப்பாக்கம் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 8 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி(14), அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ் (40 ) என்பவர், சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது அவரை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார்.

இதுகுறித்து பெற்றோருக்கு தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், கடந்த 2022-ல் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரமேஷ் மீது புகார் கொடுத்திருந்தனர்.

அந்தப் புகாரின் பேரில் குற்றவாளி ரமேஷை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்,

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து குற்றவாளி வழக்கின் விசாரணைக்காக கடந்த 3 ஆண்டுகளாக திருவள்ளூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை திருவள்ளூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பாக இன்று(புதன்கிழமை) நடைபெற்றது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜரானார்.

அப்போது இந்த வழக்கில் குற்றவாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பிரிவு 450 கீழ் அவருக்கு 10 ஆண்டுகளும் 10 ஆயிரம் அபராதமும் பிரிவு -342 கீழ் 1 ஆண்டும் ரூ.1000 அபராதமும் பிரிவு -354 கீழ் 5 ஆண்டுகள், 5 ஆயிரம் அபராதமும் பிரிவு 5(l),5j (ii) 6(1) 10 ஆண்டுகள்,ரூ.10 ஆயிரமும் என மொத்தம் 26 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 26,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Thiruvallur POCSO Special Court has sentenced the accused to 26 years in prison in the case of sexually assaulting a 14-year-old girl in Thiruvallur

பொன்முடி வழக்கு: முழு விடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறை

சைவம், வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய விடியோ பதிவு ஆதாரங்களை, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.முழு விடியோ ஆதாரங்களைப் பார்த்த பிறகு, விசாரணை நடத்தப்படும்... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு! எத்தனை ரயில் நிலையங்கள்?

சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ரூ.1964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தர்விட்டுள்ளது.பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் குடியரசுத் தலைவர்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை பிற்பகல் தரிசனம் செய்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் முர்மு, சென்னையில் இரு... மேலும் பார்க்க

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் எடுத்துகொடுத்த நடிகருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.சேலத்தில் இடுகாடுகளில் பிரேதத்தை அடக்கம் செய்யும் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்... மேலும் பார்க்க

வலுவடைந்த புயல் சின்னம்! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நேற்று(செப். 3) உருவான புயல் சின்னம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ச... மேலும் பார்க்க

செப். 5-ல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!

மிலாது நபியையொட்டி வருகிற செப். 5 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது. எனினும் அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல செயல்... மேலும் பார்க்க