செய்திகள் :

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு! எத்தனை ரயில் நிலையங்கள்?

post image

சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ரூ.1964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தர்விட்டுள்ளது.

பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும் மெட்ரேர் ரயில் நைலயங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் அமைக்கப்படவிருக்கும் விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

இதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ இரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையற்ற சாலைப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இணைப்பை வழங்கும். வெளிவட்டச் சாலை (Outer Ring Road) உடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப்பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.

முன்மொழியப்பட்ட நீட்டிப்பு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் வழியாகச் செல்லும், இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் இரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கும்.

வழித்தடத்தின் மொத்த நீளம்: 15.46 கி.மீ ஆகும், தற்போது 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவிருக்கிறது. தற்போது மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு ரூ. 9,335 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் ப... மேலும் பார்க்க

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த கெடுவுக்கு நாளை(செப். 3) பதில் அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரு... மேலும் பார்க்க

பொன்முடி வழக்கு: முழு விடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறை

சைவம், வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய விடியோ பதிவு ஆதாரங்களை, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.முழு விடியோ ஆதாரங்களைப் பார்த்த பிறகு, விசாரணை நடத்தப்படும்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் குடியரசுத் தலைவர்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை பிற்பகல் தரிசனம் செய்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் முர்மு, சென்னையில் இரு... மேலும் பார்க்க

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் எடுத்துகொடுத்த நடிகருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.சேலத்தில் இடுகாடுகளில் பிரேதத்தை அடக்கம் செய்யும் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்... மேலும் பார்க்க

வலுவடைந்த புயல் சின்னம்! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நேற்று(செப். 3) உருவான புயல் சின்னம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ச... மேலும் பார்க்க