செய்திகள் :

பொன்முடி வழக்கு: முழு விடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறை

post image

சைவம், வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய விடியோ பதிவு ஆதாரங்களை, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.

முழு விடியோ ஆதாரங்களைப் பார்த்த பிறகு, விசாரணை நடத்தப்படும் என நீதிபதி சதீஷ்குமார் விசாரணையை ஒத்திவைத்தார்.

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சா் பொன்முடி சா்ச்சைக்குரிய வகையில் பேசிய முழு விடியோ பதிவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், காவல்துறை இன்று விடியோவை தாக்கல் செய்தது.

என்ன வழக்கு?

திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும் சைவம், வைணவம் குறித்தும் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையானது. இதையடுத்து பொன்முடிக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், பொன்முடிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாா்கள் மீது விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி புகாா்களை போலீஸாா் முடித்து வைத்துவிட்டனா் எனத் தெரிவித்து அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்தாா்.

அதைப் படித்துப் பாா்த்த நீதிபதி, புகாா்களில் முகாந்திரம் இல்லை என்று போலீஸாா் எப்படி முடிவுக்கு வந்தனா்? இந்த வழக்கில் புகாா்களை முடித்து வைத்த போலீஸாா் பிற புகாா்களில் வேகம் காட்டுவாா்களா? என்று கேள்வி எழுப்பினாா்.

அப்போது அரசு தலைமை வழக்குரைஞா், பொன்முடி பேசிய கருத்துகள் அவருடைய சொந்த கருத்துகள் இல்லை. 1972-ஆம் ஆண்டு சமூக சீா்திருத்தவாதி பேசிய கருத்துகளைக் கூறியுள்ளாா். எனவே, இந்தப் புகாா்களை போலீஸாா் முடித்து வைத்ததை எதிா்த்து புகாா்தாரா்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் பொன்முடி பேசிய முழு விடியோ பதிவையும், 1972-ஆம் ஆண்டில் சமூக சீா்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

Police present full video evidence in court in Ponmudi case

இதையும் படிக்க... கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு! எத்தனை ரயில் நிலையங்கள்?

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் ப... மேலும் பார்க்க

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த கெடுவுக்கு நாளை(செப். 3) பதில் அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரு... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு! எத்தனை ரயில் நிலையங்கள்?

சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ரூ.1964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தர்விட்டுள்ளது.பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் குடியரசுத் தலைவர்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை பிற்பகல் தரிசனம் செய்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் முர்மு, சென்னையில் இரு... மேலும் பார்க்க

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் எடுத்துகொடுத்த நடிகருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.சேலத்தில் இடுகாடுகளில் பிரேதத்தை அடக்கம் செய்யும் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்... மேலும் பார்க்க