செய்திகள் :

வலுவடைந்த புயல் சின்னம்! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

post image

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நேற்று(செப். 3) உருவான புயல் சின்னம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நேற்று (செப். 2) வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுவடைந்து இன்று (செப். 3) காலை நிலவரப்படி, அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி, வடக்கு ஒடிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

03-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

04-09-2025 மற்றும் 05-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (செப். 3): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (செப். 4): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தொடரும் வரதட்சணை கொடுமை: பெங்களூரில் ஒரே வாரத்தில் 2வது தற்கொலை!

The Chennai Meteorological Department has reported that the storm system that formed in the northeastern Bay of Bengal and adjacent areas yesterday (September 3) has strengthened into a deep depression.

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் ப... மேலும் பார்க்க

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த கெடுவுக்கு நாளை(செப். 3) பதில் அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரு... மேலும் பார்க்க

பொன்முடி வழக்கு: முழு விடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறை

சைவம், வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய விடியோ பதிவு ஆதாரங்களை, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.முழு விடியோ ஆதாரங்களைப் பார்த்த பிறகு, விசாரணை நடத்தப்படும்... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு! எத்தனை ரயில் நிலையங்கள்?

சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ரூ.1964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தர்விட்டுள்ளது.பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் குடியரசுத் தலைவர்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை பிற்பகல் தரிசனம் செய்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் முர்மு, சென்னையில் இரு... மேலும் பார்க்க