செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக முடிவு!

post image

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அமெரிக்க டாலர் குறியீட்டெண் பலவீனம் ஆகிய காரணங்களால், இன்றைய டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதன் வரலாறு காணாத குறைந்த மட்டத்திலிருந்து 9 காசுகள் மீண்டு ரூ.88.06 ஆக நிலைபெற்றது.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக கட்டணக் கவலைகள் காரணமாக தொடர்ந்து, அந்நிய நிதி வெளியேற்றம் அதிகரிப்பும், ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவிற்கு சென்றதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.15 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.87.98 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.88.19ஐ தொட்ட நிலையில், முடிவில் 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06-ஆக முடிந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.88.15 ஆக இருந்தது.

இதையும் படிக்க: நிலையற்ற வர்த்தகத்தில் தொடங்கி உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!

The rupee recovered 9 paise from its all-time low level to settle at 88.06 against US dollar on Wednesday, on positive domestic equities, softening of crude oil prices and weak US dollar.

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

புதுதில்லி: இன்றைய வர்த்தகத்தில் உலோகப் பங்குகள் உயர்ந்து, பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த ஏற்றத்திற்கு உறுதுணையாக இருந்தது. இதனையடுத்து டாடா ஸ்டீல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.டாட... மேலும் பார்க்க

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

புதுதில்லி: பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர். அதே வேளையில் அதன் ஐபிஓ 7.13 முறை அதிக சந்தா வசூலிக்கப்பட்டதாக என்எஸ்இ-யின் தரவுகளை மேற்கோள் காட்டி நிறுவனம் தெர... மேலும் பார்க்க

நிலையற்ற வர்த்தகத்தில் தொடங்கி உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!

மும்பை: உலோகப் பங்குகளின் ஏற்றம் தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்த அதீத நம்பிக்கையால், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்... மேலும் பார்க்க

54 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஓப்போ என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகம்!

ஓப்போ நிறுவனத்தில் புதிய தயாரிப்பாக என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகமாகியுள்ளது. மக்களைக் கவரும் வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த இயர் பட்ஸ் 560mAh திறனுடன் 54 மணிநேரம் தொடர்ந்து பாடல்களைக் கேட்கும் வகை... மேலும் பார்க்க

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் என்ன?

பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய நிலையில் தற்போது சற்று சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,295.99 புள்ளிகளி... மேலும் பார்க்க

யுபிஐ மூலம் ஜிஎஸ்டி: ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி வசதி

ஒருங்கிணைந்த பணப்ரிமாற்ற முறை (யுபிஐ), கடன் அட்டை (கிரெடிட் காா்டு), வங்கிக் கணக்கு அட்டை (டெபிட் காா்டு), இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களது வாடிக்கையாளா்கள் மற்றும் வாடிக்கையாளா் அல்லாதவா்கள் ... மேலும் பார்க்க