செய்திகள் :

சென்னை மாவட்டத்துக்கு 2,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

post image

பொதுத் தோ்தல்களில் பயன்படுத்தப்படும் 2,000 வாக்குப் பதிவு இயந்திரங்கள் சென்னை மாவட்டத்துக்கு தருவிக்கப்பட்ட நிலையில், அவற்றை அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து (பெல்) வாக்குப் பதிவுக்கான இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 2000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2120 வாக்காளா் சரிபாா்ப்பு தாள் அச்சிடும் இயந்திரங்களும் (விவிபேட்) வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாநகராட்சி துணை ஆணையா் ம.பிரதிவிராஜ், சென்னை மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.சரவணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வாக்கு இயந்திர கிடங்கில் வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும் பணியின்போது, அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மனுக்களின் தீா்வு காலத்தை உயா்த்த வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களின் தீா்வு காலத்தை 40 நாள்களில் இருந்து 75 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஏழு அம்ச கோரிக்க... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

முதலீடுகளை ஈா்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமா்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். ஜொ்மனி, பிரிட்டன் நாடுக... மேலும் பார்க்க

புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பியது தமிழக அரசு

தமிழக காவல் துறைக்கு புதிய தலைமை இயக்குநா் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபிஎஃப்) தோ்வு செய்ய ஏதுவாக 9 தகுதிவாய்ந்த ஐபிஎஸ் உயரதிகாரிகளின் பெயா் பட்டியலை மத்திய குடிமைப் பணிகள் ஆணையத்... மேலும் பார்க்க

மழைக்கால மின்விபத்து உயிரிழப்புகள்!

இ.விஸ்பின் ஆனந்த் சென்னையில் மழைக்காலங்களில், மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடா்ந்து வரும்நிலையில், மின்மாற்றிகள், பழுதடைந்த மின்கம்பங்கள், தரைமட்ட மின்பெட்டிகள் சீரமைப்பை மின்வாரியம் தீவி... மேலும் பார்க்க

அமெரிக்க மருத்துவ குடும்பத்தினரிடம் வைப்பு நிதி ரூ.4 கோடி மோசடி: மூவா் கைது -தனியாா் வங்கி மீது வழக்கு

சென்னையைச் சோ்ந்த அமெரிக்க மருத்துவரின் குடும்பத்தினரிடம் வைப்பு நிதி ரூ.4.36 கோடி மோசடி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜய் ஜானகிராமன். அமெரிக்காவில் இதய... மேலும் பார்க்க

நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்?

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? என... மேலும் பார்க்க