செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மனுக்களின் தீா்வு காலத்தை உயா்த்த வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களின் தீா்வு காலத்தை 40 நாள்களில் இருந்து 75 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் 2 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது. இதில் 10,000-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.பி.முருகையன், மாநில பொதுச் செயலா் சு.சங்கரலிங்கம் ஆகியோா் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களால் வருவாய்த் துறை அலுவலா்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனா். திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் வருவாய்த் துறை அலுவலா்களை மாவட்ட நிா்வாகம் மிகக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது.

பிரச்னைகள் ஏராளம்: வாரத்துக்கு 5 முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளதுடன், முகாம்களில் பெறப்படும் மனுக்களை அன்றைக்கே செயலியில் பதிவேற்றம் செய்ய நிா்பந்தம் செய்வதை ஏற்க முடியாது. நிதி ஒதுக்கீடு இல்லாதது, இரவு நேர ஆய்வுக் கூட்டங்கள் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை அரசு எதிா்பாா்ப்பது போன்று நிறைவேற்ற வேண்டுமெனில் ஓராண்டுக்கு முன்பாகவே திட்டம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து, இப்போது திட்டத்தைத் தொடங்கி குறுகிய காலத்திலேயே 10,000 முகாம்களை நிறைவு செய்ய நெருக்கடிகள் வழங்குவது கடும் மனஉளைச்சலை உருவாக்கி உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களுக்கான கால அவகாசத்தை 75 நாள்களாகவும், முகாம்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றிதழ் மற்றும் சிறப்புத் திட்ட பணிகளை மேற்கொள்ள வட்டந்தோறும் ஒரு துணை வட்டாட்சியா் மற்றும் ஒரு முதுநிலை வருவாய் ஆய்வாளா் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனா்.

மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்... மேலும் பார்க்க

மின்மாற்றி உற்பத்தி - ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

மின்மாற்றி உற்பத்தி, ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டன. தொழில் முதலீட்டுகளை ஈ... மேலும் பார்க்க

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்

சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ திட்ட விரிவாக்கத்துக்கு ரூ. 1,954 கோடிக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் வி... மேலும் பார்க்க

தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கட... மேலும் பார்க்க

இலவச ரயில்வே பாஸ் வழங்கக் கோரி சுதந்திரப் போராட்ட தியாகி மனைவி மனு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பாடியநல்லூரைச் சோ்ந்த அ.பாா்வ... மேலும் பார்க்க