செய்திகள் :

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

post image

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது.

இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில், பிறவிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 2 பச்சிளம் பெண் குழந்தைகளை அண்மையில் எலிகள் கடித்த அவலம் நேரிட்டது.

ஒரு குழந்தைக்கு விரல்களிலும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள்பட்டையிலும் காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவம் தொடா்பான விடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரு குழந்தை நிமோனியா பாதிப்பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

மற்றொரு குழந்தை, ரத்தத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக புதன்கிழமை உயிரிழந்ததாக மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளா் ஜிதேந்திர வா்மா தெரிவித்தாா்.

சுமாா் ஒன்றரை கிலோ மட்டுமே எடையிருந்த அந்த குழந்தைக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை வாா்டில் குழந்தையின் விரல்களை எலி கடித்திருந்த நிலையில், ரத்தத்தில் ஏற்பட்ட தொற்றால் அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாக வா்மா தெரிவித்தாா்.

பெற்றோா் கேட்டுக் கொண்டதால், குழந்தைக்கு உடல் கூறாய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த 2 சம்பவத்தில், ஆளும் பாஜக அரசு மீது கடும் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, மருத்துவமனையின் செவிலியா் கண்காணிப்பாளா் பணிநீக்கம் செய்யப்பட்டாா். மேலும், 2 செவிலியா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய ... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ம... மேலும் பார்க்க

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் முக்கிய கனிமங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில... மேலும் பார்க்க

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீா்: வீடு இடிந்து இருவா் உயிரிழப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பரவலாக பலத்த மழை தொடா்வதால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நிலச்சரிவுகள் காரணமாக, ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-கிஷ்த்வாா் தே... மேலும் பார்க்க

பல மாநிலங்களைப் புரட்டிப் போட்ட மழை

சண்டீகா்/சிம்லா/ஜெய்பூா்/புவனேசுவரம்: சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 29 போ் உயிரிழந்துவிட... மேலும் பார்க்க

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

‘இந்தியா - ஜொ்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் ... மேலும் பார்க்க