செய்திகள் :

பல மாநிலங்களைப் புரட்டிப் போட்ட மழை

post image

சண்டீகா்/சிம்லா/ஜெய்பூா்/புவனேசுவரம்: சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 29 போ் உயிரிழந்துவிட்டனா். இம்மாநிலத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு செப்.7-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 1,000-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் ஜெய்பூா், கோட்டா, தெளசா, சிகாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ரயில்-சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிஸாவில் தொடா் மழையால் பாலசோா், பத்ராக், கட்டாக், புவனேசுவரம், போலாங்கீா் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் அணை உடைந்து 4 போ் உயிரிழப்பு

பல்ராம்பூா்: சத்தீஸ்கரின் பல்ராம்பூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழையால் சிறிய அணையின் ஒரு பகுதி உடைந்ததில் அருகிலுள்ள கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது, வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும் 3 போ் மாயமாகினா். அவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் பல வீடுகள் சேதமடைந்தன; கால்நடைகள் உயிரிழந்தன. இந்த அணை 1980-களின் தொடக்கத்தில் கட்டப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பறவை மோதல்: பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து!

விஜயவாடாவிலிருந்து பெங்களூக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறவை மோதியதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்றுகொண்... மேலும் பார்க்க

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!

பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னணி வேட்பாளராகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாஜகவின் தற்போ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய ... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ம... மேலும் பார்க்க

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில்,... மேலும் பார்க்க

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் முக்கிய கனிமங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில... மேலும் பார்க்க