செய்திகள் :

``ரஷ்யாவின் மீது நான் நடவடிக்கை எடுக்கவில்லையா?'' - நிருபரிடம் கொந்தளித்த ட்ரம்ப்

post image

ரஷ்யா - உக்ரைன் போர் மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது.

பிற நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை பெரும்பாலும் நிறுத்திவிட்டன. ஆனாலும், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தால், ரஷ்யா உக்ரைன் போரைத் தொடர்ந்து வருகிறது என்பது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும் குற்றச்சாட்டு.

இதனால், சீனாவைத் தவிர்த்து, இந்தியா மற்றும் பிரேசில் மீது ட்ரம்ப் கூடுதல் 25 சதவீத வரியை விதித்துள்ளார்.

ட்ரம்ப் - போலந்து அதிபர் கரோல் நவ்ரோக்கி
ட்ரம்ப் - போலந்து அதிபர் கரோல் நவ்ரோக்கி

பத்திரிகையாளர் கேள்வி

இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் மற்றும் போலந்து அதிபர் கரோல் நவ்ரோக்கி சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, போலந்து பத்திரிகையாளர் ஒருவர் ட்ரம்பிடம், "புதினின் குறித்த விரக்தியையும், ஏமாற்றத்தையும் நீங்கள் தொடர்ந்து வெளிப்படுத்துகிறீர்கள். பிறகு ஏன் ரஷ்யாவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?" என்கிற கேள்வியை முன்வைத்தார்.

ட்ரம்ப் பதில்

அதற்கு ட்ரம்ப் பதிலளித்தார்:

"எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? சீனாவிற்கு அடுத்து, ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஏறத்தாழ சமமாக எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா மீது இரண்டாம் நிலை வரி விதித்தது நடவடிக்கை இல்லை என்று சொல்கிறீர்களா?

ரஷ்யா - இந்தியா உறவு
ரஷ்யா - இந்தியா உறவு

இதனால் ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அது நடவடிக்கை இல்லை என்று சொல்கிறீர்களா?

நான் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளை இன்னும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறும்போது, நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேட வேண்டும் என்று நினைக்கிறேன்" என அவர் கூறி பொறிந்து தள்ளியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி: கொள்கை, அரசியல் வித்தியாசம் என்ன? -தவெகவுக்கு சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது வாக்குப் பதிவு நேர்மையாக தான் நடந்தது என்பதை எங்கு வந்து ... மேலும் பார்க்க

கழுகார்: கிளம்பிய இனிஷியல் தலைவர் டு 'ஐஸ்' வைக்கும் கனவுப் புள்ளி வரை!

கொதிக்கும் நலத்துறை அதிகாரிகள்!பாலுக்குக் காவலாக பூனையா?சமூகத்திற்கு நன்மை செய்ய உருவாக்கப்பட்ட துறையில், சமீபக்காலமாக மோசடி, ஊழல் புகார்கள் அதிகரித்து வருகிறதாம். அந்தத் துறையில், பணம் அதிகமாகப் புழங... மேலும் பார்க்க

Stalin: "இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார்" - இபிஎஸ் தாக்கு

"டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் வருடத்துக்கு ரூ. 5400 கோடி என்று, இந்த நான்காண்டுகளில் ரூ. 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார் அ... மேலும் பார்க்க

ஆற்காடு: `உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அடித்து விரட்டப்பட்டாரா முதியவர்? நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், `உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நேற்று (3-9-2025) நடைபெற்றது.இந்த முகாமில், வெங்கடபதி என்கிற 6... மேலும் பார்க்க

PMK: ``உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முதியவரை கொடூரமாக தாக்கியது மனிதத் தன்மையற்ற செயல்'' - அன்புமணி

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாத்தூர் கிராம ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நேற்று (3.9.2025) நடந்த `உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட செய்தி வி... மேலும் பார்க்க

டீம் சேர்க்கும் செங்கோட்டையன், நீக்கும் முடிவில் EPS? | Elangovan Explains

எடப்பாடிக்கு எதிராக டீம் சேர்க்கும் செங்கோட்டையன். அவரை நீக்கும் முடிவில் எடப்பாடி என்ன செய்கிறார்? செப் 5-ல், அதிமுகவில் பெரும் புயல் காத்திருக்கிறது என கூறப்படுகின்றது.மறுபுறம், அன்புமணியை நீக்கும் ... மேலும் பார்க்க