செய்திகள் :

பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி: கொள்கை, அரசியல் வித்தியாசம் என்ன? -தவெகவுக்கு சீமான் கேள்வி

post image

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது வாக்குப் பதிவு நேர்மையாக தான் நடந்தது என்பதை எங்கு வந்து சத்தியம் செய்வார்கள். மின்னணு வாக்கு இயந்திரத்தில் பிரச்சினைகள் இருப்பது எல்லாருக்கும் தெரியும்

சீமான்

மின்னணு வாக்கு இயந்திரம்

மின்னணு வாக்கு இயந்திரத்தை எத்தனை நாடுகள் பயன்படுத்துகின்றன? அந்த இயந்திரத்தை தயாரித்து வழங்கும் ஜப்பான் இதை பயன்படுத்துகிறதா?

உலகில் மூன்று நாடுகள் மட்டுமே இதை பயன்படுத்துகின்றன: வங்கதேசம், நைஜீரியா மற்றும் இந்தியா. இந்த மூன்றுமே ஊழல் அதிகம் உள்ள நாடுகள்.

ஈரோடு கிழக்கு தேர்தல்

ஈரோடு கிழக்கு தேர்தலில் கூடுதலாக 500 ஓட்டுகள் கிடைத்தால் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவோம். ஆனால், டெபாசிட் மீட்கக்கூடாது என்கிற காரணத்தால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் வாக்கெண்ணிக்கையை நிறுத்தி வைத்துள்ளார். அந்த இயந்திரத்தில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.

தெரு நாய்கள்
தெரு நாய்கள்

நாய்கள் பிரச்னை

கழுதை, சிட்டுக் குருவி, வண்ணத்துப் பூச்சிகள் போன்றவை அழிவின் விளிம்புக்கு சென்று விட்டன. ஆனால், நாம் எந்த அழிவிற்கும் கவலைப்படவில்லை.

நாய்களை முற்றிலுமாக ஒழிப்பதால், எலிகள் பெருகி, பிளேக் நோய் பரவுவதற்கான ஆபத்து உள்ளது. அனைத்து உயிர்களையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். நாய்களை பராமரித்து, தடுப்பூசி செலுத்த வேண்டும்.

கொள்கைக்கும் அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?

தவெகவைப் பொறுத்தவரை, பாஜக அவர்களுக்கு கொள்கை எதிரியும், திமுக அரசியல் எதிரியும் என்றால், கொள்கைக்கும் அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?

அப்படியென்றால், காங்கிரசையும், அதிமுகவையும் தவெக புனிதப்படுத்துகிறதா? ஏன் காங்கிரசைப் பற்றி எதுவும் சொல்லவில்லை? அது குற்றமற்ற கட்சியா? மன்னர் ஆட்சியின் தொடக்கமே காங்கிரஸ் தான்.

தவெக தலைவர் விஜய்
தவெக

கவுன்சிலர் பேச்சு

திண்டிவனத்தில் கவுன்சிலர் பட்டியலின் மக்களை தரக்குறைவாக பேசியதை நாட்டின் மிகப்பெரிய அவமானமாக நினைக்கிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதுபோன்று செய்பவர்களுக்கு கல்வி சான்றிதழ் செல்லாது, கடவு சீட்டு இல்லை, குடும்ப அட்டை இல்லை, வாக்குரிமை இல்லை என அனைத்தையும் நீக்கி விடுவோம்,” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந்த செங்கோட்டையன்?!

முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன்அதிமுக-வுக்குள் மீண்டும் ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு மனம் விட்டுப் பேசப் போகிறேன் என தேதி நேரமெல்லாம் குறித்திருக்கிறார். எடப்பாடிக்கும்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! - மே தின பூங்காவில் என்ன நடந்தது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க இன்று மே தின பூங்காவில் கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போகுமாறு எ... மேலும் பார்க்க

`விஜய் கட்சி, அந்த 2 சமூக வாக்குகளை டார்கெட் செய்கிறது’ - 9 தொகுதிகளை அலசிய அமைச்சர் எ.வ.வேலு

செப்டம்பர் 3-ம் தேதியான நேற்று... வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் தி.மு.க-வின் வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை... மேலும் பார்க்க

GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்வதென்ன?

ஜிஎஸ்டி மாற்றம்:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (புதன்கிழமை) இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக... மேலும் பார்க்க