செய்திகள் :

உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!

post image

உக்ரைனில் போரை அமைதிக்குக் கொண்டுவரவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக டொனால்ட் டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.

டிரம்ப் அரசின் வரிவிதிப்புக்கு எதிரான அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவில் டிரம்ப் அரசு குறிப்பிட்டுள்ளதாவது, ரஷியாவில் எண்ணெய் வாங்கும் இந்தியா மீது விதித்த வரியானது, உக்ரைனில் அமைதிக்கான டிரம்ப்பின் முக்கிய அடி என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ஓராண்டுக்கு முன்னதாக அமெரிக்கா ஒரு இறந்த நாடாகவே இருந்தது. ஆனால், தற்போது அமெரிக்காவை துஷ்பிரயோகம் செய்த நாடுகள் டிரில்லியன் கணக்கான டாலர் செலுத்துவதால், அமெரிக்கா மீண்டும் ஒரு வலுவான, நிதிரீயான மற்றும் மதிப்புமிக்க நாடாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா மீது வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பர வரி என்றுகூறி, மற்றைய நாடுகள் மீது வரியை விதித்த டொனால்ட் டிரம்ப் அரசு, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரியையும் விதித்தது. இந்தியா மீது மொத்தமாக 50 சதவிகித வரியை விதித்தார் டிரம்ப்.

இந்த நிலையில், அதிபரின் அவசரகால சட்டங்களைப் பயன்படுத்தி டிரம்ப் விதித்த வரிவிதிப்புகள் சட்டவிரோதமானவை என்று வரிவிதிப்புக்கு எதிரான உத்தரவுகளை நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் பிறப்பித்தது.

நியூயார்க் வர்த்தக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்தது. இருப்பினும், நியூயார்க் வர்த்தக நீதிமன்றத்தின் உத்தரவையே கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதிசெய்தது.

இதனையடுத்து, அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்திலும் டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Tariffs on India vital for Ukraine peace, Team Trump tells US top court

சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்க மாணவர்களை ஆசிரியர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் நர... மேலும் பார்க்க

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

காங்கிரஸை போல் வரி விதித்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.தில்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர... மேலும் பார்க்க

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளியைத் தொடர்ந்து 5 பாஜக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், கடந்த செவ்... மேலும் பார்க்க

குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !

குஜராத் மாநிலத்தில், சுமார் 92.64 சதவிகிதம் பருவமழை பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், 113 அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையி... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதி திரும்புகிறதா? மத்திய அரசுடன் புதிய ஒப்பந்தம்!

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக்... மேலும் பார்க்க

கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

மே 9 கலவர வழக்குத் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மற்றொரு மருமகன் ஷெர்ஷா கானுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழ... மேலும் பார்க்க