செய்திகள் :

கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

post image

மே 9 கலவர வழக்குத் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மற்றொரு மருமகன் ஷெர்ஷா கானுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல், பணமோசடி உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான ஒரு வழக்கில் அவரை கடந்த 2023-ம் ஆண்டு மே 9-ந்தேதி போலீஸார் அவரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் இம்ரான்கானின் மருமகன்கள் ஷாஹ்ரேஸ் மற்றும் ஷெர்ஷா கானை லாகூர் போலீசார் கைது செய்தனர்.

ஒருநாள் முன்னதாக ஷெர்ஷா கானின் சகோதரர் ஷாஹ்ரேஸ் கானுக்கு லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து இன்று ஷெர்ஷாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

ஷெர்ஷா மற்றும் ஷாஹ்ரேஸ் இருவரும் இம்ரான் கானின் சகோதரி அலீமா கானின் மகன்கள் ஆவர்.

ஆகஸ்ட் 21 அன்று லாகூர் போலீஸார் இரு சகோதரர்களையும் கைது செய்தனர், இது "போலி வழக்கு" என்றும், கடந்த வார இறுதியில் அவர்களின் போலீஸ் காவல் முடிவடைந்த பின்னரும் இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர் என்று அலீமா கூறினார்.

இந்த வழக்கு இன்று நடத்தப்பட்ட விசாரணையில், ஷெர்ஷாவின் வழக்குரைஞர், லாகூர் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில், தனது கட்சிக்காரருக்குஎதிரான வழக்குப் பதிவை அரசு தரப்பு இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று வாதிட்டார்.

ஷெர்ஷாவுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்கும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால், சந்தேக நபரை வரம்பற்ற காலத்திற்கு சிறையில் வைத்திருக்க முடியாது என்று அவரது வழக்குரைஞர் வாதிட்டார். ஷெர்ஷா இம்ரான் கானின் மருமகன் என்பதால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

வாதங்களைக் கேட்ட பிறகு, பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்ற நீதிபதி மன்சர் அலி கில், ஷெர்ஷாவை விடுவிக்க உத்தரவிட்டார், மேலும் 100,000 பவுண்டு ஜாமீன் பத்திரத்தைச் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இம்ரான்கானின் மருமகன்கள் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியிருந்தன, இது ஒரு "அரசியல் வேட்டை" என்றும் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

Pakistan's jailed former prime minister Imran Khan's another nephew, Shershah Khan, was granted bail by an Anti-Terrorism Court on Thursday in a case related to an attack on a senior military officer's house in Lahore during the May 9 riots.

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 2024-25-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியலில் முறைகேடாக பெயா் சோ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவா் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்யப... மேலும் பார்க்க

தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியா்

கேரளத்தில் கல்லூரி தோ்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகாா் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளாா் கேரள பேராசிரியிா் ஆனந்த் விஸ்வநாதன். மூணாறு அரசு க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும்: தொழில் நிறுவனங்களுக்கு வா்த்தக அமைச்சா் வலியுறுத்தல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் பலன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று வா்த்தம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூ... மேலும் பார்க்க

இணைய விளையாட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை

இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது. உயா... மேலும் பார்க்க

47% மாநில அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வு அறிக்கை

நாடு முழுவதும் 302 அமைச்சா்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமா், முதல்வா்க... மேலும் பார்க்க