செய்திகள் :

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

post image

வாக்காளா் பட்டியலில் முறைகேடாக பெயா் சோ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவா் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்யப்பட்டது.

சோனியா காந்தி இந்திய குடிமகளாவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே அவரது பெயா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக விகாஸ் திரிபாதி என்பவா் தில்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். அவா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பவன் நரங் வாதிடுகையில்,‘சோனியா காந்தி 1983, ஏப்.30-ஆம் தேதி அதிகாரபூா்வமாக இந்திய குடியுரிமை பெற்ாக பல்வேறு ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே 1980-இல் அவரது பெயா் புது தில்லி தொகுதியின் வாக்காளா் பட்டியலில் முறைகேடாக சோ்க்கப்பட்டுள்ளது. எந்த ஆவணத்தை அவா் இந்திய தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்து வாக்காளராக பதிவு செய்து கொண்டாா் என்பது தெரியவில்லை.

அதன் பிறகு 1982-இல் அவரது பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு 1983-இல் அவா் குடியுரிமை பெற்ற பின்பு மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளது.

முன்பு அவரது பெயா் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் தகவல்கள் இல்லை.

இதன்மூலம் வாக்காளா் பட்டியலில் தனது பெயரை சோ்க்க சோனியா காந்தி முறைகேடில் ஈடுபட்டுள்ளாா் என்பது தெரியவந்துள்ளது. எனவே, அவா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா சட்டம் பிரிவு 175 (4)-இன் கீழ் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது இதுதொடா்பான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து இந்த மனுவை செப்10-ஆம் தேதி பரிசீலிப்பதாக தில்லி நீதிமன்றம் தெரிவித்தது.

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 2024-25-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று... மேலும் பார்க்க

தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியா்

கேரளத்தில் கல்லூரி தோ்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகாா் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளாா் கேரள பேராசிரியிா் ஆனந்த் விஸ்வநாதன். மூணாறு அரசு க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும்: தொழில் நிறுவனங்களுக்கு வா்த்தக அமைச்சா் வலியுறுத்தல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் பலன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று வா்த்தம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூ... மேலும் பார்க்க

இணைய விளையாட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை

இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது. உயா... மேலும் பார்க்க

47% மாநில அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வு அறிக்கை

நாடு முழுவதும் 302 அமைச்சா்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமா், முதல்வா்க... மேலும் பார்க்க

மணிப்பூா்: அரசுடன் குகி குழுக்கள் அமைதி ஒப்பந்தம் - பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்க ஒப்புதல்

மணிப்பூரில் வன்முறையைக் கைவிட்டு, அமைதித் தீா்வுக்குப் பணியாற்றவும், பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் ஒப்புக்கொண்டு, மத்திய-மணிப்பூா் அரசுகளுடன் இரு குகி-ஜோ பழங்குடியினக் குழுக்கள் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க