செய்திகள் :

இணைய விளையாட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை

post image

இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது.

உயா் நீதிமன்றங்களில் வேறுபட்ட தீா்ப்புகள் வழங்க வாய்ப்பிருப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுக்களை அடுத்த வார விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், நீதிபதி வினோத்சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு ஒப்புக்கொண்டது.

முன்னதாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ‘இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்து சட்டமாக இயற்றப்பட்ட பின் அதற்கு எதிராக கா்நாடகம், மத்திய பிரதேசம் மற்றும் தில்லி உயா் நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஒரே விவகாரம் தொடா்பாக வெவ்வேறு நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் முரண்பட்ட தீா்ப்புகள் வழங்க வாய்ப்புகள் உள்ளன.

இந்தச் சட்டம் இணைய விளையாட்டுகள் துறையை கண்காணிக்கவும் அதனால் பொதுமக்கள் பாதிப்படுவதை தடுக்கவும் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் ‘இது அரசமைப்புச் சட்டப்பிரிவு 14 (சமத்துவ உரிமை) மற்றும் சட்டப்பிரிவு 19(1)(ஜி) (தொழில் செய்வதற்கான உரிமை) மற்றும் சட்டப் பிரிவு 21 (வாழ்வுரிமை) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளதா?’ என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதேபோல் ‘கூட்டாட்சி தத்துவத்தை மீறி இணைய விளையாட்டுகள் துறையில் மாநிலங்கள் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதா?’ என மற்றொரு கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

எனவே, ஒரே விவகாரத்தின் மீது வெவ்வேறு தீா்ப்புகள் வழங்கப்படுவதை தவிா்க்கும் நோக்கில் இந்த 3 உயா் நீதிமன்றங்களில் இணைய விளையாட்டுகள் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் வைத்து விளையாடும் இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் இணையவழி விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் சட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 2024-25-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியலில் முறைகேடாக பெயா் சோ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவா் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்யப... மேலும் பார்க்க

தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியா்

கேரளத்தில் கல்லூரி தோ்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகாா் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளாா் கேரள பேராசிரியிா் ஆனந்த் விஸ்வநாதன். மூணாறு அரசு க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும்: தொழில் நிறுவனங்களுக்கு வா்த்தக அமைச்சா் வலியுறுத்தல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் பலன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று வா்த்தம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூ... மேலும் பார்க்க

47% மாநில அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வு அறிக்கை

நாடு முழுவதும் 302 அமைச்சா்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமா், முதல்வா்க... மேலும் பார்க்க

மணிப்பூா்: அரசுடன் குகி குழுக்கள் அமைதி ஒப்பந்தம் - பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்க ஒப்புதல்

மணிப்பூரில் வன்முறையைக் கைவிட்டு, அமைதித் தீா்வுக்குப் பணியாற்றவும், பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் ஒப்புக்கொண்டு, மத்திய-மணிப்பூா் அரசுகளுடன் இரு குகி-ஜோ பழங்குடியினக் குழுக்கள் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க