செய்திகள் :

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெயர் போர்த் துறையாக மாற்றம்!

post image

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் பெயரைப் போர்த் துறையாக மாற்றும் நிர்வாகக் கோப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திடவுள்ளார்.

கடந்த மாதமே பாதுகாப்புத் துறையின் பெயரை மாற்றப் போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசியதாவது:

“முதலாம் உலகப் போரையும் இரண்டாம் உலகப் போரையும் நாங்கள் வென்றுள்ளோம். எங்களின் பாதுகாப்புத் துறையை போர்த் துறை என்றே அழைக்க வேண்டும். பாதுகாப்பு என்பது ஒரு பகுதி மட்டுமே. விரைவில் பெயர் மாற்றப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், பெயர் மாற்றத்துக்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல்முறையாக ராணுவத்தை உருவாக்கியபோது போர்த் துறை என்ற பெயரையே வைத்தார்.

பின்னர் 1949 ஆம் ஆண்டு அதிபர் ஹாரி ட்ரூமன், முப்படைகளை இணைத்து பாதுகாப்புத் துறை எனப் பெயரிட்டார். அப்போது காங்கிரஸிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகே பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

President Donald Trump is set to sign an executive order on Friday that will change the name of the US Department of Defense to the Department of War.

இதையும் படிக்க : பெரியார் உலகமயமாகிறார்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

இலங்கையில் பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 15 பேர் பலி!

இலங்கையில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பயணிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நகரத்தின் அருகில் வெல்லவாயா பகுதியில் அமைந்துள்ள மலையின் மீது நேற்று (செப்.4) ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ரஷியா!

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷியா தொடர்ந்து தட்டிக் கழித்து வந்த நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் வலியுறுத்தலா? அச்சுறுத்தலா?

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டறிந்தார்.அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா... மேலும் பார்க்க

இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தினால் இந்தியா மீது அதிக வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தரப்பில் அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் விளக்... மேலும் பார்க்க

இந்திய, சீன தலைவா்களுக்கு எதிராக காலனி ஆதிக்க உத்திகளை பயன்படுத்தும் டிரம்ப்: ரஷிய அதிபா் புதின் விமா்சனம்

‘சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளான இந்தியா, சீனாவின் தலைவா்களுக்கு (மோடி, ஷி ஜின்பிங்) எதிராக காலனி ஆதிக்க காலகட்டத்தில் இருந்த நெருக்கடி உத்திகளை அமெரிக்க அதிபா் டிரம்ப் பயன்படுத்துகிறாா்; ‘கூட்டாளி’ ... மேலும் பார்க்க

பேச்சு உதவாவிட்டால் படைபலம் தீா்வு

உக்ரைனில் நடைபெறும் போரை பேச்சுவாா்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், படைபலத்தைப் பயன்படுத்தி அதை முடித்துவைக்கப்போவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா். இரண்டாம் உலகப் போரில் சீ... மேலும் பார்க்க