செய்திகள் :

அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் வலியுறுத்தலா? அச்சுறுத்தலா?

post image

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டறிந்தார்.

அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா டிரம்ப் உள்பட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் சுந்தர் பிச்சை (கூகுள்), சத்யா நாதெல்லா (மைக்ரோசாஃப்ட்), மார்க் ஸூக்கர்பெர்க் (மெட்டா), சாம் ஆல்ட்மேன் (ஓபன்ஏஐ), டிம் குக் (ஆப்பிள்) ஆகியோருடன் அதிபர் டிரம்ப் கலந்துரையாடினார். இந்த விருந்தின்போது, அமெரிக்காவில் அந்நிறுவனங்களின் முதலீடு குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம், நீங்கள் எவ்வளவு முதலீடு செய்யவுள்ளீர்கள்? அது ஒரு பெரிய தொகை என்று எனக்கு தெரியும் என்று டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த டிம் குக், அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாகக் கூறினார். மேலும், அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்ததற்காக டிரம்ப்புக்கு நன்றியும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க்கிடம் முதலீடு குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பினார். மெட்டாவும் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாகக் கூறினார்.

இரவு விருந்தில் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் டிரம்ப்

கூகுள் முதலீடு குறித்து பதிலளித்த சுந்தர் பிச்சை, வடக்குப் பகுதிகளில் 100 பில்லியன் டாலர் செய்கிறோம். அமெரிக்காவில் அடுத்த 2 ஆண்டுகளில் 250 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளோம் என்று தெரிவித்தார்.

மைக்ரோசாஃப்ட்டின் முதலீடு 75 பில்லியன் முதல் 80 பில்லியன் டாலர் என்று அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறினார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி செய்து, அவற்றை அமெரிக்காவில் விற்பனை செய்வதை ஏற்க முடியாது என்று அதிருப்தியுடன் எதிர்ப்பும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் உற்பத்தி செய்து, அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் மீது 25 சதவிகித வரியையும் கடந்த மே மாதம் அறிவித்தார்.

இந்த நிலையில்தான், நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் டிரம்ப் கலந்துரையாடியுள்ளார்.

US President Trump hosts tech titans, asks Apple CEO to invest in US

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெயர் போர்த் துறையாக மாற்றம்!

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் பெயரைப் போர்த் துறையாக மாற்றும் நிர்வாகக் கோப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திடவுள்ளார்.கடந்த மாதமே பாதுகாப்புத் துறையின் பெயரை மாற்றப் போவதாக ... மேலும் பார்க்க

இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தினால் இந்தியா மீது அதிக வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தரப்பில் அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் விளக்... மேலும் பார்க்க

இந்திய, சீன தலைவா்களுக்கு எதிராக காலனி ஆதிக்க உத்திகளை பயன்படுத்தும் டிரம்ப்: ரஷிய அதிபா் புதின் விமா்சனம்

‘சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளான இந்தியா, சீனாவின் தலைவா்களுக்கு (மோடி, ஷி ஜின்பிங்) எதிராக காலனி ஆதிக்க காலகட்டத்தில் இருந்த நெருக்கடி உத்திகளை அமெரிக்க அதிபா் டிரம்ப் பயன்படுத்துகிறாா்; ‘கூட்டாளி’ ... மேலும் பார்க்க

பேச்சு உதவாவிட்டால் படைபலம் தீா்வு

உக்ரைனில் நடைபெறும் போரை பேச்சுவாா்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், படைபலத்தைப் பயன்படுத்தி அதை முடித்துவைக்கப்போவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா். இரண்டாம் உலகப் போரில் சீ... மேலும் பார்க்க

இஸ்ரேல் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனா்களில் 4-இல் 3 கைதிகள் பொதுமக்கள்!

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனா்களில் நான்கில் மூன்று போ் ஆயுதக் குழுக்களைச் சாராத பொதுமக்கள் என்று இஸ்ரேல் ராணுவ ரகசிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பிரிட்டன... மேலும் பார்க்க

உலகளாவிய புவி - அரசியல் சூழல்: இந்தியா-சிங்கப்பூா் வா்த்தக உறவை வலுப்படுத்த முடிவு

உலகளாவிய ஸ்திரமற்ற புவி-அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, இந்தியா-சிங்கப்பூா் வா்த்தக உறவு மற்றும் சந்தை அணுகலை வலுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிரதமா் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனா். இருதரப்ப... மேலும் பார்க்க