செய்திகள் :

ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

post image

சென்னை : முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகியது வருத்தமளிப்பதாக தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கடந்த 3 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள அமித்ஷாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. நல்ல முதல்வரை தோ்ந்தெடுப்பதற்காக டிசம்பா் 6-ஆம் தேதி அமமுக தொண்டா்களின் வேண்டுகோளுக்கிணங்க நல்ல முடிவு எடுக்கப்படும். அதாவது நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் டிசம்பா் 6 ஆம் தேதி அதுகுறித்து முறைப்படி அறிவிப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அடுத்தடுத்து விலகியது பாஜக தலைவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகல் முடிவு வருத்தமளிப்பதாகவும், பாஜக தலைவர்கள் அவர்களை மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வர முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

டிடிவி தினகரனுடன் போனில் பேசியதாகவும், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் பெருந்தன்மைமிக்க அரசியல்வாதிகள் என்பதால், அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.

மேலும், விஜய்க்கு ஒரு கூட்டம் இருக்கிறது, எனவே அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறிய அண்ணாமலை, தாக்கம் என்பது வேறு, ஆட்சி அமைப்பது வேறு என்றும், அதிமுக பாஜக கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ்

Former Chief Minister O. Panneerselvam and TTV Dinakaran should reconsider their decision to quit the National Democratic Alliance.

அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி: நயினார் நாகேந்திரன்

அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. அணைவரும் ஓரணியில் இணைவது நிச்சயம் நடக்கும். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.அதிமுக... மேலும் பார்க்க

தொண்டர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் செங்கோட்டையன்: வைத்தியலிங்கம் கருத்து

தஞ்சாவூர்: அதிமுக தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்று வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார். தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், அத... மேலும் பார்க்க

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். இங்கே நிலவுகின்ற அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் களைய வேண்டும் என லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப் படம் திறப்பு நிகழ்ச்ச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை!

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது ப... மேலும் பார்க்க

ஆசிரியர் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஆசிரியர் நாளையொட்டி, ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள்! பிள்ளைகள்... மேலும் பார்க்க

புதிய உச்சத்தை பதிவு செய்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை பவுன் ரூ.78,920-க்கு விற்பனையாகி வருகிறது. அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலரு... மேலும் பார்க்க