செய்திகள் :

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை!

post image

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது பருவ மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 35,000 கனஅடி வீதம் அதிகரித்துள்ளதால், உபரி நீர் வரத்தின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது வியாழன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 16,000 கன அடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 32,000 கன அடியாக தொடர்ந்து நீர்வரத்து தமிழக,கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கலில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐவர் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்த கொட்டி வருகிறது.

தடை உத்தரவின் காரணமாக ஒகேனக்கல்லில் பூட்டப்பட்டுள்ள பரிசல் துறை.

அருவிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி மற்றும் சினி அருவிகளில் சுற்றுலாப் பணிகள் குளிப்பதற்கு 6 ஆவது நாளாக நீட்டித்துள்ளது.

மேலும், காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் வெள்ளிக்கிழமை முதல் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

தடை உத்தரவின் காரணமாக பிரதான அருவி நுழைவு வாயில் மற்றும் சின்னாறு பரிசல் துறை மூடப்பட்டு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவுகள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளார் உள்பட 6 பேர் இடைநீக்கம்!

prohibition to operate parisal and bathe in waterfalls in Hogenakkal cauvery

ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

சென்னை : முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை ... மேலும் பார்க்க

அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி: நயினார் நாகேந்திரன்

அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. அணைவரும் ஓரணியில் இணைவது நிச்சயம் நடக்கும். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.அதிமுக... மேலும் பார்க்க

தொண்டர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் செங்கோட்டையன்: வைத்தியலிங்கம் கருத்து

தஞ்சாவூர்: அதிமுக தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்று வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார். தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், அத... மேலும் பார்க்க

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். இங்கே நிலவுகின்ற அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் களைய வேண்டும் என லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப் படம் திறப்பு நிகழ்ச்ச... மேலும் பார்க்க

ஆசிரியர் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஆசிரியர் நாளையொட்டி, ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள்! பிள்ளைகள்... மேலும் பார்க்க

புதிய உச்சத்தை பதிவு செய்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை பவுன் ரூ.78,920-க்கு விற்பனையாகி வருகிறது. அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலரு... மேலும் பார்க்க