செய்திகள் :

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

post image

கொல்கத்தா: ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சீர்திருத்தத்தால் நிகர நிதி தாக்கமானது ஆண்டுக்கு ரூ. 48,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ச்சி மற்றும் நுகர்வு ஊக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது, குறைந்த வருவாய் இழப்பானது ரூ. 3,700 கோடியாக இருந்தாலும், நிதி பற்றாக்குறையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

56 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தற்போதுள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை இரண்டு அடுக்காக மத்திய அரசு மாற்றியமைத்தது. ஜிஎஸ்டி வரியானது 5 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில பொருள்களுக்கு மட்டும் 40 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் முக்கியமான செலவுகள் குறைக்கப்பட்டிருப்பது, வங்கித் துறையில் நேர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, அதன் சராசரி 14.4 சதவிகிதமாக இருந்தது, தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள் மூலம் 9.5 ஆகக் குறைந்துள்ளது.

முன்னதாக 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கபட்டது.

தற்போது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடப் பயன்படுத்தும் 295 அத்தியாவசியப் பொருள்களின் வரி விகிதமானது 12 -இல் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த நிதியாண்டில் பணவீக்கமானது 25 முதல் 30 சதவிகிதம் வரை குறையக் கூடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீடு 2026 - 27 வரையிலான காலகட்டத்தில் 65 புள்ளிகள் முதல் 75 புள்ளிகள் வரை இருக்கக் கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

GST reforms will cause revenue loss of Rs 3,700 crore to the government: SBI

இதையும் படிக்க : ஜிஎஸ்டி வரி குறைப்பு! செப். 21 வரை மின்னணு பொருள்கள், வாகன விற்பனை 'டல்'லடிக்கும்!

ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் ... மேலும் பார்க்க

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.ஆசிரியராக பணியாற்றி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரை கௌரவிக்கும் வகை... மேலும் பார்க்க

வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை: 11வது நாளாக நிறுத்தம்!

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி குகைக் கோயில் யாத்திரை தொடர்ந்து 11வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 26 அன்று கத்ரா பெல்ட்டின் திரிகுடா மலைகளில் உள்ள அத்குவாரியில... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 2024-25-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியலில் முறைகேடாக பெயா் சோ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவா் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்யப... மேலும் பார்க்க

தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியா்

கேரளத்தில் கல்லூரி தோ்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகாா் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளாா் கேரள பேராசிரியிா் ஆனந்த் விஸ்வநாதன். மூணாறு அரசு க... மேலும் பார்க்க