செய்திகள் :

``செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்; நெருக்கடியான காலங்களில்'' - சசிகலா

post image

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோர் விலகல், இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்து அமித் ஷா திடீர் ஆலோசனை நடத்தியதன் பின்னணி, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி விவகாரம் பரபரப்பாக உள்ளது.

இது போதாதென்று, தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களைத் தவிர்ப்பது, டெல்லிக்கு தனியாகச் சென்று நிர்மலா சீதாராமனைச் சந்திப்பது என வெளிப்படையாகச் செயல்பட்டு வந்த அ.தி.மு.க. மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் 5-ம் தேதி மனம் திறந்து பேசப்போவதாக சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

அதன்படி, ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தனது அலுவலகத்தின் முன்பு செய்தியாளர்களை இன்று சந்தித்த செங்கோட்டையன்,

"கட்சியைவிட்டு வெளியே சென்றவர்களை மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அடுத்த 10 நாள்களுக்குள் மீண்டும் சேர்த்து அ.தி.மு.க-வை ஒன்றிணைக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் கூட குறிப்பிடாமல் கெடு விதித்தார்.

மேலும், "அ.தி.மு.க ஒருங்கிணைந்தால்தான் நான் முழுமையாக சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்." என்று செங்கோட்டையன் எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்த நிலையில், செங்கோட்டையனின் இத்தகைய கருத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சசிகலா, "அ.தி.மு.க எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம் என்பதைக் கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்திருக்கிறார்.

பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடன் இருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அ.தி.மு.க-வின் ரத்தம்தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார்.

கழகம் ஒன்றுபட செங்கோட்டையனின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்தும் இதுதான், நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.

சசிகலா
சசிகலா

செங்கோட்டையனைப் போன்ற உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை தி.மு.க என்ற தீய சக்தி எந்த விதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடாக ஈடேறாது.

தி.மு.க-வின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது.

இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே தி.மு.க என்ற தீய சக்தி, நம் கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடை போட்டு தடுத்தாலும், அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும் செருக்கோடும் மிளிரும்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட வலிமைமிக்க அ.தி.மு.கதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழி வகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

``அதிமுக-வில் செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது”-வைத்திலிங்கம்!

ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அதிமுகவில் இருக்கிற எல்லோரும் கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இல்லை என்றால் முடியாது ... மேலும் பார்க்க

``அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல்; அதனால்தான்'' - செல்வப்பெருந்தகை சொல்வதென்ன?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்திருந்தார்.அதேபோல், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செங்கோட்... மேலும் பார்க்க

GST: பைக்/கார் விலைலாம் செமையா குறைஞ்சிடுச்சு! ஆனா இது மட்டும் நடக்காம இருக்கணும்!

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு‛இதற்குத்தானடா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்று ஒரு மிடில் க்ளாஸ் மாதவன் வாய்ஸில் இருந்து கத்த வேண்டும்போல் இருக்கிறது இந்த ஜிஎஸ்டி வரிக் குறைப்புச் செய்தி.சும்மாவா பின்னே! 10% வரி... மேலும் பார்க்க

Doctor Vikatan: குடலைச் சுத்தப்படுத்த விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்வது சரியா?

Doctor Vikatan: வயிறு மற்றும் குடலைச் சுத்தப்படுத்தும் டீடாக்ஸ் வழிகள் பற்றி நிறைய வீடியோக்கள், ரீல்ஸ் பார்க்கிறோம். அவை எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை. அந்தக் காலத்து வைத்தியமான விளக்கெண்ணெய் குடிப்பத... மேலும் பார்க்க

BJP: ``இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு இடமில்லை'' - பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா வருத்தம்

சமீபத்தில் தமிழக பாஜக கட்சியில் பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டு, 25 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இப்பட்டியலை வெளியிட்டிருந்தார்.அதில், நடிகை குஷ... மேலும் பார்க்க

Russia: ``ட்ரம்பின் பேச்சுவார்த்தைகள், முயற்சிகள் இதுவரை தோல்வியே'' - புதின் சொல்வதென்ன?

ரஷ்யா - உக்ரைன் இடையே பிப்ரவரி 2022 முதல் போர் நடந்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றன.இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் ப... மேலும் பார்க்க