செய்திகள் :

ஆக்ஸ்போர்டில் உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா? - ஜி.யு. போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின்!

post image

ஆக்ஸ்போர்டில் ஜி.யு. போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்றார்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பெரியார் உருவப் படத் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

பின்னர், அதனைத் தொடர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டிற்கு வந்து, தமிழ் மொழி கற்று தமிழுக்கு தொண்டாற்றிய ஜியு. போப்பின் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார்.

ஜி.யு. போப் கல்லறையில் செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஜி.யு.போப்! 19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார்! தமிழ் மேல் தீராக் காதல் கொண்டார்! தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார்!

ஆக்ஸ்போர்ட் அறிவாலயத்தில் பேராசிரியராகத் தமிழ்த் தொண்டாற்றினார்! ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா? அங்குள்ள ஜி.யு.போப்பின் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்” எனப் பதிவிட்டுள்ளார்.

CM Stalin paid homage at G.U. Pope's grave in Oxford!

இதையும் படிக்க : ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

தாம்பரத்திலிருந்து புறப்படும் பாண்டியன், சோழன் உள்பட 5 விரைவு ரயில்கள்! செப்.10 முதல்.!

பாண்டியன், சோழன், மலைக்கோட்டை உள்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு ... மேலும் பார்க்க

ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி: ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு!

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை வெள்ளிக்கிழமை குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த நபர்கள், உடன் சென்ற இருவரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,செப்.05ல் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீட்டு பயணத்தில் ரூ. 13,016 கோடி ஈர்ப்பு!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதலீடு ஈர்ப்புப் பயணத்தில் ரூ. 13,016 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ... மேலும் பார்க்க

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செ... மேலும் பார்க்க

ஒன்றுபட்ட அதிமுக! செங்கோட்டையன் கருத்துக்கு சசிகலா வரவேற்பு!

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்திய நிலையில், அவரின் கருத்தை வரவேற்பதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது,தனது உடலில் ஓடுவது அ... மேலும் பார்க்க