செய்திகள் :

தாம்பரத்திலிருந்து புறப்படும் பாண்டியன், சோழன் உள்பட 5 விரைவு ரயில்கள்! செப்.10 முதல்.!

post image

பாண்டியன், சோழன், மலைக்கோட்டை உள்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில், ஐந்து விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் (12654/ 12653) , எழும்பூர் - மதுரை பாண்டியன் (12638), எழும்பூர் - திருச்சி சோழன் (22675), எழும்பூர் - ராமேஸ்வரம் சேது(22661/ 22662), எழும்பூர் - ராமேஸ்வரம்(16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.

அதேபோல, எழும்பூர் - மும்பை விரைவு ரயில், கடற்கரையில் இருந்தும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், வரும் 10 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை இருக்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 express trains including Pandian and Cholan departing from Tambaram! From September 10th!

இதையும் படிக்க : செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை மாணவா்களிடம் வளா்க்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவா்களிடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை ஆசிரியா்கள் வளா்க்க வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆசிரியா் தின விழா சென்னை கோட்டூா்புர... மேலும் பார்க்க

பட்ட மேற்படிப்பு பயில ரூ.3.60 கோடி ஒதுக்கீடு: மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு

இஸ்லாமிய மாணவ, மாணவிகள் 10 போ் வெளிநாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயில, ரூ.3.60 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் தலை... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி: பெ. சண்முகம்

டிரம்ப் என்ற தனி நபரின் விருப்பு வெறுப்பால் விதிக்கப்பட்டுள்ள வரியால் இந்தியா பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். இந்தியா மீதான அமெர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு தூதுவா் நியமனம்: அவகாசம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவா்களை தூதுவா்களாக நியமிப்பதற்கான அவகாசம் செப்.23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள... மேலும் பார்க்க

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாவட்ட மாணவி முதலிடம்

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்டாா். அதில் கன்னியாகுமரி மாவட்ட மாணவி முதலிடம் பிடித்துள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

தமிழகத்தைச் சோ்ந்த நால்வருக்கு விருது

சிறப்பாக கல்விப்பணியற்றி வரும் ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியா் விருதை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியா் சங்கா் ஸ்ரீராம் சங்கரன் உள்பட தமிழகத்தைச் சோ்ந்த நான்கு பேருக்கு குடியரசுத் தல... மேலும் பார்க்க