செய்திகள் :

இலங்கையில் பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 15 பேர் பலி!

post image

இலங்கையில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பயணிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரத்தின் அருகில் வெல்லவாயா பகுதியில் அமைந்துள்ள மலையின் மீது நேற்று (செப்.4) இரவு பயணிகள் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சுமார் 1,000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், 15 பேர் சம்பவயிடத்திலேயே பலியான நிலையில், 5 குழந்தைகள் உள்பட 16 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்துவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதால், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, இலங்கையில் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு நீண்டகாலமாக முன்வைக்கப்படுகின்றது. இதனால், பெரும்பாலான மலைகளின் மீது செல்லும் வாகனங்கள் அவ்வப்போது விபத்தில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ரஷியா!

15 passengers reported dead after bus overturns in Sri Lanka

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து- 16 பேர் பலி

போர்ச்சுகலில் ஃபுனிகுலர் கேபிள் கார் தடம்புரண்டதில் 16 பேர் பலியாகினர்.ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் புகழ்பெற்ற ஃபுனிகுலர் கேபிள் கார் வியாழக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் 16 பேர் பலியாக... மேலும் பார்க்க

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ரஷியா!

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷியா தொடர்ந்து தட்டிக் கழித்து வந்த நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் வலியுறுத்தலா? அச்சுறுத்தலா?

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டறிந்தார்.அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெயர் போர்த் துறையாக மாற்றம்!

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் பெயரைப் போர்த் துறையாக மாற்றும் நிர்வாகக் கோப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திடவுள்ளார்.கடந்த மாதமே பாதுகாப்புத் துறையின் பெயரை மாற்றப் போவதாக ... மேலும் பார்க்க

இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தினால் இந்தியா மீது அதிக வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தரப்பில் அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் விளக்... மேலும் பார்க்க

இந்திய, சீன தலைவா்களுக்கு எதிராக காலனி ஆதிக்க உத்திகளை பயன்படுத்தும் டிரம்ப்: ரஷிய அதிபா் புதின் விமா்சனம்

‘சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளான இந்தியா, சீனாவின் தலைவா்களுக்கு (மோடி, ஷி ஜின்பிங்) எதிராக காலனி ஆதிக்க காலகட்டத்தில் இருந்த நெருக்கடி உத்திகளை அமெரிக்க அதிபா் டிரம்ப் பயன்படுத்துகிறாா்; ‘கூட்டாளி’ ... மேலும் பார்க்க