செய்திகள் :

அயோத்தியில் சுவாமி தரிசனம் செய்தார் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

post image

பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே அயோத்தி ராமர் கோயில் மற்றும் பிற முக்கிய கோயில்களில் வழிபாடு மேற்கொண்டார்.

இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் 9.30 மணியளவில் அயோத்தி விமான நிலையத்தில் பிரதமர் டோப்கே வந்தடைந்தார். அயோத்தி மாவட்ட நிர்வாகத்தால் பிரதமர் டோப்கேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் உத்தரப் பிரதேசஅமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி, அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி, எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா, மூத்த நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து, அவர் அலாகாபாத் -லக்னௌ-கோரக்பூர் நெடுஞ்சாலைகள் வழியாக அயோத்தி ராமர் கோயிலை அடைந்தார்.

அயோத்தி நகரம் முழுவதும் பிஏசி, சிஆர்பிஎஃப், எஸ்எஸ்எஃப், சிவில் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிரதமர் அலுவலகம் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் அவரது வருகையை உன்னிப்பாகக் கண்காணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் டோப்கே ராம் லல்லா கோயில், அனுமன்கரி மற்றும் அயோத்தியில் உள்ள பிற முக்கிய கோயில்களை தரிசனம் செய்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறப்பு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பூட்டான் பிரதமர் அயோத்தியில் இருந்து தில்லிக்குச் செல்கிறார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, டோப்கேயை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பூட்டான் பிரதமருக்கு பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும் பூட்டானும் நீண்ட காலமாக மிகவும் நல்லுறவைப் பகிர்ந்து கொள்கின்றன.

இரு நாடுகளின் தலைவர்களும் அடிக்கடி ஒருவரையொருவர் சந்தித்து வருகிறார்கள், இதை ஒரு முக்கியமான வருகையாக நாங்கள் கருதுகிறோம் என்று அவர் கூறினார்.

Bhutan Prime Minister Dasho Tshering Tobgay arrived in Ayodhya on Friday morning on a four-hour visit, during which he offered prayers at the Ram temple and other prominent shrines.

குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?

குஜராத்தின், மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையத்தினுள் திடீரென புகுந்த ஆற்று நீரில் சிக்கி மாயமான 5 தொழிலாளிகளைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மஹிசாகர் மாவட்டத்தின், லுன... மேலும் பார்க்க

தாணே: புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் மீட்பு

தாணேவில் புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், கல்வாவில் உள்ள கோலாய் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ் சர்மா(19). இவர் மும்பையில் உள்ள முலுண்டிலிருந்த... மேலும் பார்க்க

மோசமான வானிலை..! தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் சென்ற விமானம்!

மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ சென்ற விமானம், கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, 5 நாள் அரசு மு... மேலும் பார்க்க

ஒரு கோடி பேரை கொல்ல 400 கிலோ ஆர்டிஎக்ஸ்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அச்சுறுத்தல்!

மும்பை நகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பையில் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாட்டம் முடிவடையும் நிலையில், சனிக்கிழமையில் நீர்நி... மேலும் பார்க்க

ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் ... மேலும் பார்க்க

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.ஆசிரியராக பணியாற்றி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரை கௌரவிக்கும் வகை... மேலும் பார்க்க