செய்திகள் :

``அதிமுக தொண்டர்களுக்கு வணக்கம்'' -செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு ஆரம்பம்

post image

சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை அ.தி.மு.க-வில் சேர்க்க முடியாது என்று கறாராக ஓரம் கட்டிவிட்டு, பல்வேறு முரண்பாடுகளுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து 2026 தேர்தலை சந்திக்கலாம் என்று வியூகம் வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவில் அதிகாரப்போட்டி

இந்தச் சூழலில் அதிமுக தேர்தலில் வென்றாலும் பாஜகவே தலைமை வகிக்கும் என்ற சிக்கல் ஒருபுறம்; சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஓரணியில் அதிமுகவை இணைக்கும் அதிகாரப்போட்டி மறுபுறம் என மாட்டிக்கொண்டு தவிக்கிறார் இபிஎஸ்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

செங்கோட்டையன் vs இபிஎஸ்

இதற்கிடையில் இப்போது இபிஎஸுக்கு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மூலமாக பெரிய சிக்கல் வந்திருக்கிறது. இபிஎஸ் மூத்த தலைவர்களை மதிப்பதில்லை, அதிமுகவின் பல நிகழ்ச்சிகளில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படுவதில்லை என்று செங்கோட்டையன் இபிஎஸ் உடன் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமலே இருந்து வந்தார். இருவருக்குமிடையே நீண்ட நாள்காக சத்தமில்லாத உரசல் இருந்து வந்தது.

கடந்த வாரம், கோபிசெட்டிப்பாளையத்திலுள்ள தனது அலுவலகத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடைய புகைப்படங்களுடன் பெரியார் புகைப்படத்தை வைத்து செங்கோட்டையன், செப்டம்பர் 5-ம் தேதி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து மனம் திறந்து பேசுவதாக அறிவித்திருந்தார்.

இபிஎஸ் மீதான அதிருப்தி, அதிமுகவில் இருக்கும் உட்கட்சிப் பிரச்னை, பாஜகவுடனான கூட்டணி சிக்கல்கள், சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரனின் அதிகாரப்போட்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசவுள்ளதாக அதிமுக தொண்டர்களால் எதிர்பார்க்கப்பட்டன.

ஈரோடு கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் அலுவலகத்தின் முன்பு

செங்கோட்டையன் பிரஸ் மீட்

இந்நிலையில் இன்று ஈரோடு கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் அலுவலகத்தின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ADMK: ``செங்கோட்டையன் சொல்வது நல்லதுதான்; அரசியலில் எதுவும் நடக்கலாம்'' - பாஜக நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையை செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்... மேலும் பார்க்க

ADMK: ``செங்கோட்டையனின் வேண்டுகோள்; நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம்'' -ஓபிஎஸ் பதில்

செங்கோட்டையை செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்... மேலும் பார்க்க

``பெரியாருக்கு என் கையால் சோறு பரிமாறியிருக்கிறேன்'' - லண்டனில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.இந்தப் பயணத்தின் போது, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தோட்ட தரணியின் கை ... மேலும் பார்க்க

ஜி.எஸ்.டி 2.0 சீர்திருத்தங்கள்... புதிய குழப்பங்களை உண்டாக்காமல் இருக்கட்டும்!

சமீபத்திய சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி பேசியபடியே, 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி, வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் 5%, 18% என இரண்டு அடுக்குகளாக மாற்றப்ப... மேலும் பார்க்க

"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்!

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் போராடி 13-ம் தேதி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள் இன்று (செப்டம்பர் 4) காலையில் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் கூடியிருந்தனர்.தகவலறி... மேலும் பார்க்க

GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? - விளக்கும் நிபுணர்!

'ஒரே நாடு, ஒரே வரி' - இது தான் ஜி.எஸ்.டியின் சாராம்சம்.முன்பு, மத்திய அரசு வரி, மாநில அரசு வரி, இந்த வரி, அந்த வரி என ஏகப்பட்ட வரிகளைக் கட்ட வேண்டியதாக இருந்தது. 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி, இந்தியா... மேலும் பார்க்க