செய்திகள் :

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளார் உள்பட 6 பேர் இடைநீக்கம்!

post image

சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி ஒருவரை தனிப்படை காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்தனர்.

அப்போது, லாட்டரி சீட்டு விற்பனைக்கு, உட்கோட்ட உயர் அதிகாரி மற்றும் காவல்துறையினர் தனக்கு உதவி செய்வதாக வியாபாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், கடந்த ஐந்து நாள்களாக சிதம்பரத்தில் சிறப்பு தனிப்படை காவலர்கள் முகாமிட்டு ரகசிய விசாரணை நடத்தினர். அதில், லாட்டரி வியாபாரிக்கு காவல்துறையினர் உதவியதும், பணம் பெற்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து, சிதம்பரம் துணைக் கண்காணிப்பாளர் டி. அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் எஸ். ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன், சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன், காவலர்கள் கணேசன், கோபால கிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் கார்த்திக் ஆகிய 7 பேர், வேலூர் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன் உள்ளிட்ட ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

6 people including Chidambaram City Police Inspector suspended

இதையும் படிக்க : பிரிந்தவர்களை 10 நாள்களில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

தொழில்நுட்ப பணி தோ்வு: 4,172 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தோ்வினை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா். கடலூா் மாவட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்டி எஸ்பி., பாலகிருஷ்ணன் நேரடி மேற்பாா்வையில் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி பலாத்காரம்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

வயிற்றுவலியால் பெண் தற்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். குறிஞ்சிப்பாடி வட்டம், அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் துரை. இவரது மனைவி மீனாட்சி(45). இவா்,நீண்ட நாட்களாக வயிற்ற... மேலும் பார்க்க

பக்கெட் தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் பக்கெட் தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது பெண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது. கடலூா், கே.என்.பேட்டை பகுதியில் வசிப்பவா்கள் சிவசங்கரன்-ஞானசௌந்தரி தம்பதி. இவா்களது இரட்டை... மேலும் பார்க்க