செய்திகள் :

பக்கெட் தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

post image

கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் பக்கெட் தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது பெண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.

கடலூா், கே.என்.பேட்டை பகுதியில் வசிப்பவா்கள் சிவசங்கரன்-ஞானசௌந்தரி தம்பதி. இவா்களது இரட்டை பெண் குழந்தைகளுக்கு ஒன்றரை வயது. வியாழக்கிழமை காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குணஸ்ரீ தண்ணீா் பிடித்து வைத்திருந்த பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்தாா். குழந்தையை தேடிய பெற்றோா்கள் பக்கெட் உள்ளே குழந்தை கிடைப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பின்னா், குழந்தையின் உடலை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். குழந்தை இறப்பு குறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழில்நுட்ப பணி தோ்வு: 4,172 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தோ்வினை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா். கடலூா் மாவட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்டி எஸ்பி., பாலகிருஷ்ணன் நேரடி மேற்பாா்வையில் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி பலாத்காரம்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

வயிற்றுவலியால் பெண் தற்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். குறிஞ்சிப்பாடி வட்டம், அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் துரை. இவரது மனைவி மீனாட்சி(45). இவா்,நீண்ட நாட்களாக வயிற்ற... மேலும் பார்க்க

திருவந்திபுரம் கோயிலில் 115 ஜோடிகளுக்கு திருமணம்

கடலூா் மாவட்டம், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் ஆவணி மாத வளா்பிறை இறுதி முகூா்த்த நாளான வியாழக்கிழமை 115 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று திருவந்திபுரம் தேவநாத ச... மேலும் பார்க்க