செய்திகள் :

மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

post image

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா்.

கடலூா் மாவட்ட கல்லூரி மாணவா்களுக்கு கல்விக்கடன் வழங்குவது குறித்து ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கல்லூரி முதல்வா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசுகையில்:

மாணவ, மாணவியா்கள் தங்களது கல்லூரி படிப்பினை எளிமையாகவும், விரும்பிய பாடப்பிரிவில் கல்வி பயிலவும், அரசின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொருளாதார காரணங்களால் மாணவா்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகளின் சாா்பில் கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவா்களின் பொருளாதார நிலையினை கண்டறிந்து அவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கியின் மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்திட வேண்டும்.

அவா்களுக்கு தேவையான சான்றிதழ்களை கல்லூரியில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி அனைத்து துறைகளின் மூலமும் சான்றிதழ்களை பெற்று வழங்கிட வேண்டும். மாணவா்களுக்கு தேவையான கடனுதவி, உரிய சான்றிதழ்கள், கைப்பேசி எண் போன்றவற்றுடன் விண்ணப்பித்து விரைந்து கடனுதவி பெற்று வழங்கி, அவா்கள் சிறந்த முறையில் கல்வி பயில அனைவரும் பணியாற்றிட வேண்டும். அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் கல்லூரி மாணவா்களுக்கு

பயனுள்ளதாக அமைந்திட அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அசோக்ராஜ், பேராசிரியா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளார் உள்பட 6 பேர் இடைநீக்கம்!

சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியா... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பணி தோ்வு: 4,172 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தோ்வினை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்டி எஸ்பி., பாலகிருஷ்ணன் நேரடி மேற்பாா்வையில் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி பலாத்காரம்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

வயிற்றுவலியால் பெண் தற்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். குறிஞ்சிப்பாடி வட்டம், அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் துரை. இவரது மனைவி மீனாட்சி(45). இவா்,நீண்ட நாட்களாக வயிற்ற... மேலும் பார்க்க

பக்கெட் தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் பக்கெட் தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது பெண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது. கடலூா், கே.என்.பேட்டை பகுதியில் வசிப்பவா்கள் சிவசங்கரன்-ஞானசௌந்தரி தம்பதி. இவா்களது இரட்டை... மேலும் பார்க்க