செய்திகள் :

கடலூர் சிப்காட் ஆலையில் ரசாயன கசிவு! 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

post image

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட ரசாயன கசிவால் பாதிக்கப்பட்ட 40-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன உற்பத்தி ஆலையில், இன்று (செப்.5) ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், உண்டான நச்சுப்புகையை சுவாசித்த 40-க்கும் அதிகமானோருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 43 பேரும் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட வருவாய்த் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற ஆலையில் சோதனை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இந்தக் கசிவானது ஆலைக்குள் இருந்த நீராவி வால்வில் இருந்து வெளியாகியிருக்கக் கூடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து, முழுமையான விசாரணை மேற்கொள்ள கடலூர் ஆட்சியர் தலைமையில், வருவாய் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் அதிகாரிகள் இடம்பெற்ற குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்

More than 40 people have been admitted to hospital after being affected by a chemical leak at the SIPCOT facility in Cuddalore.

கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன்(90) வயது மூப்பின் காரணமாக சென்னையில் இன்று காலமானார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்க... மேலும் பார்க்க

ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்

பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சித்தோரைக் கைது செய்ய வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பாமகவின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ம.க.... மேலும் பார்க்க

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் ரஞ்சிதா. இவர், மகப்ப... மேலும் பார்க்க

தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்கம்!

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசாரம் மேற்கொள்ள சென்ற அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனம் முற்றுகையிடப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Edappadi Palaniswami's vehicle bloc... மேலும் பார்க்க

தாம்பரத்திலிருந்து புறப்படும் பாண்டியன், சோழன் உள்பட 5 விரைவு ரயில்கள்! செப்.10 முதல்.!

பாண்டியன், சோழன், மலைக்கோட்டை உள்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு ... மேலும் பார்க்க

ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி: ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு!

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை வெள்ளிக்கிழமை குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த நபர்கள், உடன் சென்ற இருவரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி... மேலும் பார்க்க