செய்திகள் :

மதுரை: `காவல் நிலையம் கட்டப்பஞ்சாயத்து செய்யுமிடமாக செயல்பட்டுள்ளது' - நீதிபதி காட்டம்!

post image

"காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எப்படி கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு இந்த காவல் நிலையம் ஒரு உதாரணம்" என்று மதுரையிலுள்ள திலகர் திடல் காவல் நிலையத்தை குற்றம்சாட்டி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

போலீஸ்

விஜயகுமார் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரையைச் சேர்ந்த சசிகுமார், ரம்யா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த முன் ஜாமீன் மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, "மனுதாரர்கள் மருந்து பொருட்களை வாங்கியதற்காக 15 லட்சம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த தொகையை செலுத்தாததால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை திலகர் திடல் காவல் நிலையம் இந்த வழக்கில் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாக மாறியுள்ளது. சுமார் 8 லட்சத்து 83 ஆயிரத்து 400 ரூபாயை மனுதாரர்கள் காவல் நிலையத்தில் செலுத்தி ரசீது பெற்றுள்ளனர். இது அரசு வழக்கறிஞராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எவ்வாறு கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கைது நடவடிக்கைக்கு பயந்து காவல் நிலையத்தில் மனுதாரர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர். திலகர் திடல் காவல் நிலையம் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாக செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

ஆகவே இந்த வழக்கில் மதுரை மாநகர துணை காவல் ஆணையரை நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கில் சேர்க்கிறது. அவர் இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளதா? திலகர் திடல் காவல் ஆய்வாளர் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து நடத்தி வருகிறாரா? என்பதை உறுதி செய்து சம்பந்தப்பட்ட திலகர் திடல் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு, மனுதாரர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்ட விவகாரம்: நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறை; சிபிஐ விசாரணை கோரி மனு

தன்னிடம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரத்துடன் புகார் அளித்தும், கண்டுகொள்ளாத லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை கேட்டுப் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்துள்ள வழக்கு பரபரப... மேலும் பார்க்க

பெட்ரோல் குண்டு வீச்சு, கடும் தாக்குதல்; பாமக மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய முயற்சியா?

பா.ம.க-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளவர் ம.க. ஸ்டாலின். இவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் பதவியில் உள்ளார். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியு... மேலும் பார்க்க

'கருவின் பாலினத்தைக் கண்டறிய ரூ.25,000' - புரோக்கரை மடக்கிப் பிடித்து சுகாதாரத்துறை; என்ன நடந்தது?

சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கடலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு சட்டவிரோதமாக பாலினத்தைக் கண்டறிய அனுப்ப... மேலும் பார்க்க

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராச... மேலும் பார்க்க

2வது மனைவி பிரிந்துசென்றதால் ஆத்திரம்; போதையில் குழந்தையைக் கொன்ற டெம்போ ஓட்டுநர்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அபினவ் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.சுந்தரலிங்கத்துக்கு செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற எலி ராஜா. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீஸார் கண்காணித்து வ... மேலும் பார்க்க