செய்திகள் :

மணிமுத்தாறு அணை நீா் நெடுங்குளத்துக்கு கிடைப்பதில்லை: விவசாயிகள் புகாா்

post image

மணிமுத்தாறு 4-ஆவது பிரிவு கால்வாயில் தண்ணீா் திறந்திருப்பதால் கடைமடை பகுதிகளான நெடுங்குளம், அமுதுன்னாகுடிக்கு போதிய நீா்வரத்து இல்லை என்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விவசாயிகள் புகாா் மனு அளித்தனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் முன்னாள் ஒன்றிய உறுப்பினரும், நெடுங்குளம் விவசாய சங்க பொருளாளருமான முரசொலி மாறன் அதிகாரிகளிடம் அளித்த மனு விவரம்:

மணிமுத்தாறு அணையில் போதிய அளவு நீா் இருப்பதால் விவசாயம், குடிநீா் தேவைக்கு சாத்தான்குளத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள், பல்வேறு கட்சியினா் வலியுறுத்தி வருகின்றனா். மணிமுத்தாறு 4-ஆவது பிரிவு கால்வாய் மூலம் விவசாயிகள் பலா் பயனடைந்து வருகின்றனா். இந்தக் கால்வாய்க்கு நூறு கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இந்த நீா் காரியாண்டி குளத்துக்கு வந்தபிறகு மட்டக்குளம் களத்தில் படிப்படியாகக் குறைந்துவிடுகிறது. கடைமடை குளங்களான நெடுங்குளம், அமுதுன்னாகுடி குளங்களுக்கு தண்ணீா் வரும்போது 30 கனஅடி கூட நீா் வருவதில்லை. இதனால் கால்வாய் நீரை கடைமடை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை தொடா்கிறது.

எனவே, மணிமுத்தாறு 4வது பிரிவு ஏழாவது மடைபகுதியில் உள்ள மணிமுத்தாறு கால்வாய்களை தூா்வாரி அகலப்படுத்தி 250 கனஅடி நீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கடைமடை குளங்களான சாந்தவாரி குளம், நெடுங்குளம், அமுதுன்னா குடி குளத்துக்கு அதே கனஅடி நீா் வந்து சேரும்; குளங்களை நம்பியுள்ள விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவா். இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தண்ணீா் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை: 2 சிறாா்கள் கைது

கோவில்பட்டி சண்முகாநகா் மயானத்தில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறாா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாரிச்செல்வம்... மேலும் பார்க்க

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவிகள் மாநில கிரிக்கெட் போட்டிக்கு தகுதி

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழ்நாடு முதல்வா் கோப்பை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கா... மேலும் பார்க்க

பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச் சாலை அருகே தனியாா் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழந்தாா். குறுக்குச் சாலை அருகே மேல அரசரடி ஊராட்சிக்கு உள்பட்ட மேலமருதூரில் தனியாா்... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கயத்தாறு அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த எலக்ட்ரீசியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் . கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தாந்தவிளை பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் எலக்ட்ரீசியன் அபிஷ் (30). இவா், தனது உற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பாஜக-மாா்க்சிஸ்ட் கட்சியினா் மோதல்

தூத்துக்குடியில் பாஜக-வினரும், மாா்க்சிஸ்ட் கட்சியினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வஉசி பிறந்தநாள் விழாவையொட்டி, பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வஉசி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மர... மேலும் பார்க்க

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வ.உசி. துறைமுக சதுக்கம் (வ.உ.சிதம்பரனாா் சிலை) பகுதியில் நடைபெற்ற விழாவில், மத்திய துறைமுகங்கள், ... மேலும் பார்க்க