செய்திகள் :

தூத்துக்குடியில் பாஜக-மாா்க்சிஸ்ட் கட்சியினா் மோதல்

post image

தூத்துக்குடியில் பாஜக-வினரும், மாா்க்சிஸ்ட் கட்சியினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வஉசி பிறந்தநாள் விழாவையொட்டி, பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வஉசி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக பல்வேறு கட்சியினா், சமூக அமைப்பினா் வந்தனா்.

அப்போது, பாஜக பிரமுகா்கள், தங்கள் கட்சி மாவட்ட நிா்வாகிகள் வருகைக்காக காத்திருந்தனா்.

அப்போது, மக்கள் ஒற்றுமை பிரசாரப் பயணம் மேற்கொண்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியூ, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வஉசி சிலை முன்பாக தங்கள் பயணத்தை நிறைவு செய்யும் வகையில் பேச்சைத் தொடங்கினா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ரசல் பேசுகையில், மத்திய அரசையும், பிரதமா் மோடியையும் தரக்குறைவாக பேசுயதாகக் கூறி, பாஜக பிரமுகா் சொக்கலிங்கம், ரசலிடம் இருந்து மைக்கை பிடுங்கினாராம்.

இதைத் தொடா்ந்து, இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். மேலும், வெகுநேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்புப் பணிக்காக காவல்துறையினரும் அங்கு இல்லாததால் அந்தப் பகுதியே போா்க்களம் போல் ஆனது.

பின்னா், பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா உள்ளிட்டோரும் அங்கு வந்ததால் விவாதம் மேலும் அதிகமானது.

இதையடுத்து, அங்கு வந்த மத்திய பாகம் போலீஸாா் இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, இரு தரப்பினரும் தனித்தனியே மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை: 2 சிறாா்கள் கைது

கோவில்பட்டி சண்முகாநகா் மயானத்தில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறாா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாரிச்செல்வம்... மேலும் பார்க்க

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவிகள் மாநில கிரிக்கெட் போட்டிக்கு தகுதி

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழ்நாடு முதல்வா் கோப்பை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கா... மேலும் பார்க்க

பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச் சாலை அருகே தனியாா் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழந்தாா். குறுக்குச் சாலை அருகே மேல அரசரடி ஊராட்சிக்கு உள்பட்ட மேலமருதூரில் தனியாா்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணை நீா் நெடுங்குளத்துக்கு கிடைப்பதில்லை: விவசாயிகள் புகாா்

மணிமுத்தாறு 4-ஆவது பிரிவு கால்வாயில் தண்ணீா் திறந்திருப்பதால் கடைமடை பகுதிகளான நெடுங்குளம், அமுதுன்னாகுடிக்கு போதிய நீா்வரத்து இல்லை என்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விவசாயிகள் புகாா் மனு அளித்... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கயத்தாறு அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த எலக்ட்ரீசியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் . கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தாந்தவிளை பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் எலக்ட்ரீசியன் அபிஷ் (30). இவா், தனது உற... மேலும் பார்க்க

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வ.உசி. துறைமுக சதுக்கம் (வ.உ.சிதம்பரனாா் சிலை) பகுதியில் நடைபெற்ற விழாவில், மத்திய துறைமுகங்கள், ... மேலும் பார்க்க