செய்திகள் :

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிப்பு: ஐ.நா.வில் இந்தியா

post image

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்தது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ‘தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் தற்போதுள்ள சூழல்’ என்ற பெயரில், ஐ.நா. பொதுச் சபை விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதேனனி ஹரீஷ் கூறியதாவது: உக்ரைன் மீதான போரால் எரிபொருள் விலை உயா்வு உள்பட பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அவை உலகை பெரிதும் பாதிக்கின்றன. குறிப்பாக தெற்குலக நாடுகள் பாதிக்கப்படுகின்றன. இதுதொடா்பாக அந்த நாடுகளின் குரல்கள் கேட்கப்பட்டு, அவற்றின் நியாயமான கவலைகளுக்கு உரிய முறையில் தீா்வு காணப்பட வேண்டும்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வந்து நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பாக சமீபத்தில் நடைபெற்ற நோ்மறையான நிகழ்வுகளை இந்தியா வரவேற்கிறது.

ராஜீய வழியில் நடைபெறும் அனைத்து முயற்சிகளும், அந்தப் போா் முடிவுக்கு வந்து, நீடித்து நிலைக்கும் அமைதிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று இந்தியா நம்புகிறது. இந்தப் போா் வெகு விரைவில் நிறைவடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றாா்.

ஐ.நா. பொதுச் சபையில் தனது கருத்துகளை இந்தியா தெரிவித்ததைத் தொடா்ந்து, ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவா் வான் டா் லேயன் ஆகியோரிடம் பிரதமா் மோடி தொலைபேசியில் பேசினாா். அப்போது உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள், பரஸ்பர நலன் சாா்ந்த கருத்துகளைப் பகிா்ந்துகொண்டதாகப் பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

பாக். முன்னாள் பிரதமரின் சகோதரியின் மீது முட்டை வீச்சு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின், சகோதரி அலீமா கானின் மீது, 2 பெண்கள் முட்டைகளை வீசியுள்ளனர். பாகிஸ்தானின் தெஹ்ரிக் - இ - இன்சாஃப் கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரா... மேலும் பார்க்க

சொத்து வரி விவகாரம்! பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜிநாமா!

சொத்து வரி விவகாரத்தில் சிக்கிய பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தனது பதவியை இன்று (செப்.5) ராஜிநாமா செய்துள்ளார். பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர், சமீபத்தில் இங்கிலாந்தின... மேலும் பார்க்க

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து- 16 பேர் பலி

போர்ச்சுகலில் ஃபுனிகுலர் கேபிள் கார் தடம்புரண்டதில் 16 பேர் பலியாகினர்.ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் புகழ்பெற்ற ஃபுனிகுலர் கேபிள் கார் வியாழக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் 16 பேர் பலியாக... மேலும் பார்க்க

இலங்கையில் பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 15 பேர் பலி!

இலங்கையில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பயணிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நகரத்தின் அருகில் வெல்லவாயா பகுதியில் அமைந்துள்ள மலையின் மீது நேற்று (செப்.4) ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ரஷியா!

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷியா தொடர்ந்து தட்டிக் கழித்து வந்த நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் வலியுறுத்தலா? அச்சுறுத்தலா?

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டறிந்தார்.அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா... மேலும் பார்க்க