செய்திகள் :

சொத்து வரி விவகாரம்! பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜிநாமா!

post image

சொத்து வரி விவகாரத்தில் சிக்கிய பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தனது பதவியை இன்று (செப்.5) ராஜிநாமா செய்துள்ளார்.

பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர், சமீபத்தில் இங்கிலாந்தின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹோவ் நகரில், புதியதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்தப் புதிய சொத்துக்கு அவர் முறையாக வரி செலுத்தவில்லை எனவும், 40,000 பவுண்ட் அளவிலான பணத்தை மிச்சப்படுத்தியுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த விவகாரம், அந்நாட்டில் பெரும் பேசுப்பொருளான நிலையில், கடந்த செப்.3 ஆம் தேதி, தன் மீதான குற்றச்சாட்டுக்களை துணைப் பிரதமர் ரெய்னர் ஒப்புக்கொண்டார்.

தனியார் ஆலோசகர் லாவ்ரி மெக்னஸ் தலைமையிலான விசாரணையில் அரசு அமைச்சர்களுக்கான நெறிமுறைகளை அவர் மீறியுள்ளதாக, பிரதமர் கெயிர் ஸ்டார்மெரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஏஞ்சலா ரெய்னர் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக, வெளிப்படையாகத் தனது கருத்துக்களைத் தெரிவிக்கும் தலைவராக மக்களிடையே அறியப்படும் ஏஞ்சலா ரெய்னர், முறையாக வரி செலுத்தாத எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியா, ரஷியாவை சீனாவிடம் இழந்த அமெரிக்கா! டிரம்ப்பின் வஞ்சப் புகழ்ச்சியா?

Britain's Deputy Prime Minister Angela Rayner, who was embroiled in a property tax scandal, resigned from her position today (September 5).

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து- 16 பேர் பலி

போர்ச்சுகலில் ஃபுனிகுலர் கேபிள் கார் தடம்புரண்டதில் 16 பேர் பலியாகினர்.ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் புகழ்பெற்ற ஃபுனிகுலர் கேபிள் கார் வியாழக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் 16 பேர் பலியாக... மேலும் பார்க்க

இலங்கையில் பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 15 பேர் பலி!

இலங்கையில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பயணிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நகரத்தின் அருகில் வெல்லவாயா பகுதியில் அமைந்துள்ள மலையின் மீது நேற்று (செப்.4) ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ரஷியா!

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷியா தொடர்ந்து தட்டிக் கழித்து வந்த நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் வலியுறுத்தலா? அச்சுறுத்தலா?

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டறிந்தார்.அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெயர் போர்த் துறையாக மாற்றம்!

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் பெயரைப் போர்த் துறையாக மாற்றும் நிர்வாகக் கோப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திடவுள்ளார்.கடந்த மாதமே பாதுகாப்புத் துறையின் பெயரை மாற்றப் போவதாக ... மேலும் பார்க்க

இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தினால் இந்தியா மீது அதிக வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தரப்பில் அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் விளக்... மேலும் பார்க்க