செய்திகள் :

ஆா்.கே.பேட்டையில் 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் நடவு

post image

காவேரி கூக்குரல் சாா்பில் ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் மட்டும் 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் ஈஷா தன்னாா்வலா்களால் நடப்பட்டன.

சத்குரு பிறந்த நாளான செப். 3-ஆம் தேதி நதிகளுக்கு புத்துயிா் ஊட்டும் தினமாக ஈஷா தன்னாா்வலா்களால் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில், விவசாய நிலங்களில் 64,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிலையில், காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில், திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட அம்மையாா் குப்பம் கிராமத்தில் மரங்கள் நடும் விழா நடைபெற்றது. இதில், 5 அரச மரக்கன்றுகள் உள்பட 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் நடப்பட்டன.

இது குறித்து ஈஷா தன்னாா்வா் கூறியதாவது:

காவேரி கூக்குரல் மரம் சாா்ந்த விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வுப் பயிற்சிகளையும் ஏற்பாடு செய்து வருகிறது. விவசாயிகளுக்கு மண்ணுக்கேற்ற மரங்கள் நடவு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் விவசாய நிலக்களுக்கே நேரடியாகச் சென்று இலவசமாக வழங்கப்படுகிறது.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் விவசாயிகளுக்குத் தேவையான மரக்கன்றுகள் ஈஷா நாற்றுப் பண்ணைகளில் தேவையான அளவு இருப்பு உள்ளது. டிம்பா் மரக்கன்றுகள் ரூ. 5-க்கும், பொதுவான மரக் கன்றுகள் ரூ. 10-க்கும் வழங்கப்படுகிறது.

மேலும், ஜாதிக்காய், அவகோடா, சா்வசுகந்தி, லவங்கம், மிளகு கன்றுகள் குறிப்பிட்ட அளவு இருப்பு உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு, காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வீட்டின் முன்புறம் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த ஆண் குழந்தை உயிரிழந்தது. திருவள்ளூா் அருகே செஞ்சிபானம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த காரத்திக்(30)-ஈஸ்வரி(27) தம்பதிக்கு ஒரு மகளும், 1... மேலும் பார்க்க

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

காட்டுப்பள்ளியில் கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு கோரி, சக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். அப்போது போலீஸாா் மீது கற்களை வீசினா். இதனால் போலீஸாா் கண... மேலும் பார்க்க

திருவள்ளூா்: சுற்றுலா விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையால் சுற்றுலா தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் வழங்கப்படும் சுற்றுலா தொழில் முனைவோா்களுக்கான விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சி... மேலும் பார்க்க

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் இளைஞா்கள், பொதுமக்கள், மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற உள்ள திருக்கு பயிற்சி வகுப்பில் இளைஞா்கள், பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்க ஆட்சியா் மு.பிரதாப் அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க

திருவள்ளூா்: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 5,132 போ் பயன்

திருவள்ளூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மூலம் இதுவரை 5,132 போ் பயன்பெற்றுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூறியதாவது: திருவள்ளூா் மாவ... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் புறநகா் பேருந்து முனையம் நவம்பா் இறுதிக்குள் தொடங்கி வைக்கப்படும்

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சாா்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகா் பேருந்து முனையம் வரும் நவம்பா் மாத இறுதிக்குள் பயணிகளின் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளதா... மேலும் பார்க்க