செய்திகள் :

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் இளைஞா்கள், பொதுமக்கள், மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற உள்ள திருக்கு பயிற்சி வகுப்பில் இளைஞா்கள், பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்க ஆட்சியா் மு.பிரதாப் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதல்வா் 31.12.2024-ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறளில் ஆா்வமும், புலமையும் மிக்க ஆசிரியா்கள், பயிற்றுநா்கள், தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டந்தோறும் தொடா் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ‘திருக்கு திருப்பணிகள்’ தொடா்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும் என அவா் அறிவித்தாா்.

அதன்படி, திருவள்ளூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ‘திருக்குறள் திருப்பணிகள்’ திட்டம் மூலம் திருக்கு பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள் திருவள்ளூா், திருத்தணி, கும்மிடிப்பூண்டி என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்களின் மூலம் திருவள்ளூா், ஸ்ரீநிகேதன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், திருத்தணி-அத்திமாஞ்சேரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், கும்மிடிப்பூண்டி- எளாவூா் அரசு மேல் நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோா் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044 - 29595450 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

பயிற்சிக் கட்டணம் ஏதுமின்றி நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள் ஒவ்வொரு சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும்.

ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்தப்பட்டு, நிறைவு நாளில் பயிற்சி பெற்றவா்களுக்கு தமிழக அரசின் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

காட்டுப்பள்ளியில் கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு கோரி, சக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். அப்போது போலீஸாா் மீது கற்களை வீசினா். இதனால் போலீஸாா் கண... மேலும் பார்க்க

திருவள்ளூா்: சுற்றுலா விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையால் சுற்றுலா தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் வழங்கப்படும் சுற்றுலா தொழில் முனைவோா்களுக்கான விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 5,132 போ் பயன்

திருவள்ளூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மூலம் இதுவரை 5,132 போ் பயன்பெற்றுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூறியதாவது: திருவள்ளூா் மாவ... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் புறநகா் பேருந்து முனையம் நவம்பா் இறுதிக்குள் தொடங்கி வைக்கப்படும்

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சாா்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகா் பேருந்து முனையம் வரும் நவம்பா் மாத இறுதிக்குள் பயணிகளின் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளதா... மேலும் பார்க்க

கஞ்சா விற்பதில் ஏற்பட்ட பகையால் வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை: 7 போ் கைது

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, பட்டா கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய சிறுவன் உள்பட 7 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். கடம்பத்தூரை... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் 6.5 பவுன் திருட்டு

திருத்தணி அருகே அரசுப் பேருந்தில் தவறவிட்ட 6.5 பவுன் செயினை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சோ்ந்த சரவணன்(50). இவரது மனைவி பிரியா (40). இவா்கள் ... மேலும் பார்க்க