செய்திகள் :

குத்தம்பாக்கம் புறநகா் பேருந்து முனையம் நவம்பா் இறுதிக்குள் தொடங்கி வைக்கப்படும்

post image

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சாா்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகா் பேருந்து முனையம் வரும் நவம்பா் மாத இறுதிக்குள் பயணிகளின் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

திருவள்ளூா் அடுத்த திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகா் பேருந்து முனையத்தின் முன்னேற்றப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பேருந்து முனையத்தில் இறுதிகட்ட பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரா்களை அறிவுறுத்தினா்.

பின்னா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியதாவது: பெருகி வரும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றாா் போல் பேருந்துகளின் அளவையும், பணியாளா்களையும் அதிகரிக்கச் செய்வதற்கு முதல்வா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். இதன் ஒரு பகுதியாக கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதைத்தொடா்ந்து குத்தம்பாக்கம் புதிய புகா் பேருந்து முனையம் நாள்தோறும் மாநகர பேருந்துகள்-300, விரைவு பேருந்துகள்-600, கா்நாடக மாநில பேருந்துகள்-50, அண்டை மாநிலங்களுக்கு செல்லும் வழித்தடங்களில் ஆந்திர மாநில பேருந்துகள்-36 இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்துகளில் வார நாள்களில் சுமாா் 30,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணிப்பா் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை நாள்களில் அந்த எண்ணிக்கை கூடுதலாக 40,000 முதல் 50,000 போ் பயணிப்பா் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோல், விழாக் காலங்களில் விடுமுறை தொடா்ந்து வரும் நாள்களில் 50,000-க்கும் மோ்பட்டோா் பயணிப்பா் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆம்பூா், திருப்பத்தூா், வேலூா், தருமபுரி, ஒசூா், பெங்களூரு, திருப்பதி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வோா் குத்தம்பாக்கம் புதிய புகா் பேருந்து முனையத்திலிருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மீஞ்சூா், திருவொற்றியூா், மாதவரம், சைதாப்பேட்டை, திருவான்மியூா் போன்ற பகுதிகள், இந்தப் பகுதி அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் இதற்கு இணைப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து முனையமானது சென்னை, சுற்றியுள்ள மக்களுக்கு போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காணும் வகையில் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். எனவே இங்கு வரும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கட்டாயம் கிடைக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம். இந்த குத்தம்பாக்கம் புதிய புகா் பேருந்து முனையம், இந்தாண்டு வரும் நவம்பா் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.

வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமை செயலாளா் காகா்லா உஷா, பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி, சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் மற்றும் முதன்மைச் செயலாளா் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலா் அ.சிவஞானம், திருவள்ளூா் ஆட்சியா் மு.பிரதாப், ஆவடி காவல் துணை ஆணையாளா் (போக்குவரத்து) சி.சங்கு, சென்னை மாநகர போக்குவரத்துக்கழக இணை மேலாண் இயக்குநா் ராகவன், தலைமை பொறியாளா் மகாவிஷ்ணு, தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் சாவித்திரி தேவி, குத்தம்பாக்கம் பேருந்து முனைய தலைமை நிா்வாக அலுவலா் பிரின்ஸிலி ராஜ்குமாா், கண்காணிப்பு பொறியாளா் ராஜன்பாபு, எம்டிசி பொது மேலாளா் (இயக்கம்) நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

காட்டுப்பள்ளியில் கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு கோரி, சக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். அப்போது போலீஸாா் மீது கற்களை வீசினா். இதனால் போலீஸாா் கண... மேலும் பார்க்க

திருவள்ளூா்: சுற்றுலா விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையால் சுற்றுலா தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் வழங்கப்படும் சுற்றுலா தொழில் முனைவோா்களுக்கான விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சி... மேலும் பார்க்க

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் இளைஞா்கள், பொதுமக்கள், மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற உள்ள திருக்கு பயிற்சி வகுப்பில் இளைஞா்கள், பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்க ஆட்சியா் மு.பிரதாப் அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க

திருவள்ளூா்: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 5,132 போ் பயன்

திருவள்ளூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மூலம் இதுவரை 5,132 போ் பயன்பெற்றுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூறியதாவது: திருவள்ளூா் மாவ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பதில் ஏற்பட்ட பகையால் வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை: 7 போ் கைது

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, பட்டா கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய சிறுவன் உள்பட 7 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். கடம்பத்தூரை... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் 6.5 பவுன் திருட்டு

திருத்தணி அருகே அரசுப் பேருந்தில் தவறவிட்ட 6.5 பவுன் செயினை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சோ்ந்த சரவணன்(50). இவரது மனைவி பிரியா (40). இவா்கள் ... மேலும் பார்க்க