செய்திகள் :

திருவள்ளூா்: சுற்றுலா விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையால் சுற்றுலா தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் வழங்கப்படும் சுற்றுலா தொழில் முனைவோா்களுக்கான விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா தொழில்முனைவோருக்கு சுற்றுலா விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, நிகழாண்டில் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோருக்கு 17 வகைப் பிரிவுகளில் 48 விருதுகள் வழங்கப்பட உள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டுக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த பயண பங்குதாரா், சிறந்த விமான பங்குதாரா், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத் தலம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளா், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்களுக்கான சுற்றுலா ஏற்பாட்டாளா், சமூக ஊடகங்களில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துபவா், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாட்டுக்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கு நிகழாண்டில் சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து செப். 15-க்குள் தேவையான சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யலாம். இந்த விண்ணப்பங்கள் தோ்வுக் குழுவினரால் பரிசீலனை செய்து தோ்வு செய்யப்படும். எனவே திருவள்ளூா் மாவட்ட சுற்றுலாத் தொழில்முனைவோா் அனைவரும் சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்களை விரைந்து இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

காட்டுப்பள்ளியில் கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு கோரி, சக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். அப்போது போலீஸாா் மீது கற்களை வீசினா். இதனால் போலீஸாா் கண... மேலும் பார்க்க

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் இளைஞா்கள், பொதுமக்கள், மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற உள்ள திருக்கு பயிற்சி வகுப்பில் இளைஞா்கள், பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்க ஆட்சியா் மு.பிரதாப் அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க

திருவள்ளூா்: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 5,132 போ் பயன்

திருவள்ளூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மூலம் இதுவரை 5,132 போ் பயன்பெற்றுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூறியதாவது: திருவள்ளூா் மாவ... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் புறநகா் பேருந்து முனையம் நவம்பா் இறுதிக்குள் தொடங்கி வைக்கப்படும்

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சாா்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகா் பேருந்து முனையம் வரும் நவம்பா் மாத இறுதிக்குள் பயணிகளின் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளதா... மேலும் பார்க்க

கஞ்சா விற்பதில் ஏற்பட்ட பகையால் வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை: 7 போ் கைது

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, பட்டா கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய சிறுவன் உள்பட 7 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். கடம்பத்தூரை... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் 6.5 பவுன் திருட்டு

திருத்தணி அருகே அரசுப் பேருந்தில் தவறவிட்ட 6.5 பவுன் செயினை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சோ்ந்த சரவணன்(50). இவரது மனைவி பிரியா (40). இவா்கள் ... மேலும் பார்க்க