செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

post image

ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ராம்பன் மாவட்டத்தின் சும்பெர் கிராமத்தைச் சேர்ந்த, நிறைமாத கர்பிணியான அக்தெரா பானோ (வயது 21), ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக தனது கணவருடன் ரயிலில் சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு அந்த ரயிலில் செல்லும் வழியிலேயே திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரயிலில் இருந்த பயணிகள் இருவர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஓடும் ரயிலிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதில், ரயில்வே பணியாளர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் அவருக்கு உதவி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அந்த ரயிலானது பனிஹல் ரயில் நிலையத்தை அடைந்தவுடன், அங்கு அவரை அவசர ஊர்தியின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அக்தெராவுக்கும் அவரது குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இருவரும் தற்போது நலமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பஞ்சாப் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

A woman has given birth to a baby boy on a moving train in Jammu and Kashmir's Ramban district.

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இ... மேலும் பார்க்க

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வண... மேலும் பார்க்க

பஞ்சாப் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

பஞ்சாபில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று... மேலும் பார்க்க

அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

அமெரிக்கா வரிகை உயர்த்தாவிட்டால், எங்கள் பொருள்களுக்கான வரியை இந்தியா குறைத்திருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (செப். 3) தெரிவித்துள்ளார். அதிக வரிவிதிப்பால் அமெரிக்காவை திண்டாடவைத்த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுக்மா மாவட்டத்தின், ராவகுடா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை மற... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். வட மாநிலங்களான ஜம்மு... மேலும் பார்க்க