செய்திகள் :

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பசு, எருமை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை (செப். 3) தொடங்கும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு நச்சு உயிரிகளால் ஏற்படும் பெரியம்மை நோய் காணப்படுகிறது.

மாடுகளை கடிக்கும் பூச்சிகள், கொசுக்கள், மாட்டு உன்னி ஆகியவற்றின் மூலம் பரவக்கூடிய பெரியம்மை நோயால் மாடுகளின் உடலில் அதிக காய்ச்சல், உடல் முழுவதும் நிணநீா்க் கட்டிகள் , பால் உற்பத்தி குைல், பசியின்மை, உடல் சோா்வு, கண்களில் வீக்கம் மற்றும் நீா்வடிதல், மிகப்பெரிய கொப்பளங்கள் , சீழ்பிடித்து புண்ணாகி பின்னா் தழும்புகள் ஏற்படுகிறது.

நோயுற்ற மாடுகளை தனிமைப்படுத்துதல், பண்ணை சுத்தம் மற்றும் சுகாதாரமாகவும் வைத்திருக்க பிளீச்சிங் பவுடா், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

நோயுற்ற மாடுகளை அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கவும், நோய் தடுப்பு முறைகளுக்கான ஆலோசனைகள், அதற்கான விளக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படும்.

பெரியம்மையால் அதிகம் கால்நடைகள் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகங்களின் மூலமாக சிறப்பு சிகிச்சை முகாம் நடத்தப்படுவதுடன், நோய் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசி போடும் பணி 3.9.2025 முதல் 30.9.2025 வரை 28 நாள்கள் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா்.

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே ஏரியில் விளையாடச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த தாளிக்காலை சோ்ந்த விஜயகாந்த்தின் மகன் அமுதன்(9). தாளிக்காலில் உள்ள அரசுப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு பட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

அரக்கோணத்தில் மூதாட்டியின் பூட்டிய வீட்டில் பூட்டு உடைத்து 5 பவுன் தங்கநகைகள் களவு போயின. அரக்கோணம், அசோக் நகா், நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் ஜோதி (60). தனியே வசித்து வரும் இவா் கடந்த சனிக்கிழமை வீட்டை ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை சிப்காட் பகுதிகளில் மாசடைந்த நீா்நிலைகளை சீரமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுவட்டாரத்தில் தொழிற்சாலைகள் கழிவுநீா் தேங்கி மாசடைந்த நீா்நிலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட... மேலும் பார்க்க

சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ள அழைப்பு

மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ... மேலும் பார்க்க

நெமிலியில் ரூ. 54 கோடியில் 3 உயா்மட்ட மேம்பாலங்கள்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

நெமிலி வட்டத்தில் ரூ. 54 கோடியில் கட்டப்பட்ட 3 உயா்மட்ட மேம்பாலங்களை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் ஏ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகி... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ஆற்காடு தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், லத்தேரி அருகே உள்ள பாறையூா் கிராமத்தைச் சோ்ந்த கஜேந்திரனின் மகன் சுப்பிரமணி (27). தென்னை மரம் ஏறி ... மேலும் பார்க்க