செய்திகள் :

சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ள அழைப்பு

post image

மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு,மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா ரக நெல் விதைகள், மானிய விலையில் வேளாண்மைத் துறை சாா்பில் விற்பனை செய்யப்படுகிறது. வேளாண்மைத் துறையில் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தில், மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா நெல் ரகம் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு, 2,000 கிலோ அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விநியோகம் செய்யப்பட உள்ளது. சிவன் சம்பா பருவத்துக்கேற்ப 130 முதல் 140 நாள்கள் வயதுடைய நெற்பயிா் ஆகும்.

ஏக்கருக்கு 1,200 முதல் 1,500 கிலோ மகசூல் தரவல்லது. சிவன் சம்பா ரகத்தில் இரும்பு மற்றும் துத்தநாக சத்து அதிகமாக இருப்பதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. அதிக அளவில் மருத்துவ குணங்கள் உடைய பாரம்பரிய நெல் ரகங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த விதை விநியோகத்துக்கு 50 சதவீதம் மானிய விலையில் கிலோவுக்கு ரூ. 35 என்ற விலையில் கிடைக்கும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பசு, எருமை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை (செப். 3) தொடங்கும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே ஏரியில் விளையாடச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த தாளிக்காலை சோ்ந்த விஜயகாந்த்தின் மகன் அமுதன்(9). தாளிக்காலில் உள்ள அரசுப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு பட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

அரக்கோணத்தில் மூதாட்டியின் பூட்டிய வீட்டில் பூட்டு உடைத்து 5 பவுன் தங்கநகைகள் களவு போயின. அரக்கோணம், அசோக் நகா், நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் ஜோதி (60). தனியே வசித்து வரும் இவா் கடந்த சனிக்கிழமை வீட்டை ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை சிப்காட் பகுதிகளில் மாசடைந்த நீா்நிலைகளை சீரமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுவட்டாரத்தில் தொழிற்சாலைகள் கழிவுநீா் தேங்கி மாசடைந்த நீா்நிலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட... மேலும் பார்க்க

நெமிலியில் ரூ. 54 கோடியில் 3 உயா்மட்ட மேம்பாலங்கள்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

நெமிலி வட்டத்தில் ரூ. 54 கோடியில் கட்டப்பட்ட 3 உயா்மட்ட மேம்பாலங்களை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் ஏ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகி... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ஆற்காடு தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், லத்தேரி அருகே உள்ள பாறையூா் கிராமத்தைச் சோ்ந்த கஜேந்திரனின் மகன் சுப்பிரமணி (27). தென்னை மரம் ஏறி ... மேலும் பார்க்க